தமிழ்நாடு

பொதுப்பணித் துறை மானியக் கோரிக்கை.. அமைச்சர் எ.வ.வேலு வெளியிட்ட 17 புதிய அறிவிப்புகள் என்ன?

தமிழ்நாடு சட்டப்பேரவையில் பொதுப்பணித் துறை மானியக் கோரிக்கையில் 17 புதிய அறிவிப்புகளை அமைச்சர் எ.வ.வேலு வெளியிட்டார்.

பொதுப்பணித் துறை மானியக் கோரிக்கை.. அமைச்சர் எ.வ.வேலு வெளியிட்ட 17 புதிய அறிவிப்புகள் என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2023 -2024-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை மார்ச் 20 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் அடுத்த நாள் வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து நிதிநிலை அறிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்று பொதுப்பணித்துறை மீதான மானியக் கோரிக்கை நடைபெற்றது. இதில் அமைச்சர் எ.வ.வேலு 17 புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

அதன் விவரம் வருமாறு:-

1. மதுரையில் ஒரு புதிய பாரம்பரிய கட்டட மையம் மற்றும் பாதுகாப்புக் கோட்டம் மற்றும் சென்னை, வேலூர் திருநெல்வேலியில் புதியதாக மூன்று உபகோட்டங்கள் உருவாக்கப்படும்.

2. பொதுப்பணித்துறை கட்டடக்கலை அலகில் ஒரு இணைத் தலைமைக் கட்டடக் கலைஞர், ஓர் உதவிக் கட்டடக் கலைஞர் 5 இளநிலைக் கட்டடக் கலைஞர் உள்ளிட்ட 8 பணியிடங்கள் தோற்றுவிக்கப்படும்.

பொதுப்பணித் துறை மானியக் கோரிக்கை.. அமைச்சர் எ.வ.வேலு வெளியிட்ட 17 புதிய அறிவிப்புகள் என்ன?

3.பொதுப்பணித்துறையில் உள்ள மின் பிரிவினை மேம்படுத்துவதற்கு 5 புதிய மின் கோட்டங்கள், 15 புதிய மின் உபகோட்டங்கள், 10 மின் பிரிவுகள், 3 புதிய வானொலி உபகோட்டங்கள் திட்டம் மற்றும் வடிவமைப்பு வட்டத்தில் ஒரு புதிய மின் அலகு தோற்றுவிக்கப்படும்.

4. திருச்சிராப்பள்ளியில் ஒரு புதிய தரக்கட்டுப்பாடு கோட்டம் மற்றும் தஞ்சாவூர், திருவாரூரில் புதிய தரக் கட்டுப்பாடு உபகோட்டங்கள் உருவாக்கப்படும்.

5. சைதாப்பேட்டை தாடண்டர் நகரில் 190 சி வகை அரசு அலுவலகர்களுக்கான புதிய அடுக்குமாடி குடியிருப்பு ரூ.103 கோடி செலவில் கட்டப்படும்.

6. சென்னை, கீழ்ப்பாக்கம் மன நலகாப்பக மருத்துவமனை வளாகத்தில் உள்ள பொதுபோக்கு அரங்க பாரம்பரிய கட்டடம் ரூ.4.65 கோடி செலவில் புனரமைக்கப்படும்.

7. சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பழைய ஆவண அறை கோபுரம் பாரம்பரிய கட்டடம் ரூ.3.10 கோடியில் புனரமைக்கப்படும்.

8.சென்னை கிண்டி கிங் நோய் தடுப்பு மருந்து மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் உள்ள இணைப்பு பாரம்பரிய கட்டடம் (மீடியா அறை) ரூ.5.25 கோடி மதிப்பீட்டில் மறுசீரமைக்கப்படும்.

9. தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறில் உள்ள பழைய மாவட்ட முன்சீப் நீதிமன்றத்தின் பாரம்பரிய கட்டடம் ரூ.2.11 கோடியில் மறுசீரமைக்கப்படும்.

10.புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டையில் உள்ள பொது அலுவலக பாரம்பரிய கட்டடம் ரூ.15 கோடியில் புனரமைக்கப்படும்.

பொதுப்பணித் துறை மானியக் கோரிக்கை.. அமைச்சர் எ.வ.வேலு வெளியிட்ட 17 புதிய அறிவிப்புகள் என்ன?

11. கோயம்புத்தூர் மாவட்டம், கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி நிறுவன பாரம்பரிய கட்டடம் ரூ.6.80 கோடி செலவில் புனரமைக்கப்படும்.

12. மதுரையில் உள்ள மதுரை மாவட்டப் பதிவாளர் அலுவலக (தெற்கு) பாரம்பரிய கட்டடம் ரூ.4 கோடி செலவில் மறுசீரமைக்கப்படும்.

13. சிவகங்கை மாவட்டம், காரைக்குடி வட்டத்தில் உள்ள சங்கரபதி பாரம்பரிய கோட்டையை ரூ.9.09 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும்.

14. திருச்சிராப்பள்ளி சுற்றுலா மாளிகை ரூ.3.35 கோடி மதிப்பீட்டில் புனரமைத்து மேம்படுத்தப்படும்.

15. திருச்சி பொதுப்பணி பணியாளர் பயிற்சி நிலையத்தின் உள் கட்டடமைப்பு வசதிகள் ரூ.1 கோடி செலவில் மேம்படுத்தப்படும்.

16. மாநில அளவில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் தனியார் கட்டடக் கலைஞர்களின் தேர்ந்த பெயர் பட்டியல் தயாரிக்கப்படும்.

17. அரசுப் பொதுக் கட்டடங்களை திட்டமிட்டு நிர்மாணிப்பதில் புதிய வடிவமைப்புக் கொள்கை வெளியிடப்படும்.

banner

Related Stories

Related Stories