தமிழ்நாடு

“அண்ணாமலை தன்னை புரட்சியாளர் என நினைத்து கொள்கிறார்; ஆனால் அவர் ஒரு காமெடி” : மாணிக்கம் தாகூர் சாடல் !

“அண்ணாமலை தன்னை புரட்சியாளர் என நினைத்து கொள்கிறார்; ஆனால் அவர் ஒரு காமெடி” என விருதுநகர் எம்.பி. மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

“அண்ணாமலை தன்னை புரட்சியாளர் என நினைத்து கொள்கிறார்; ஆனால் அவர் ஒரு காமெடி” : மாணிக்கம் தாகூர் சாடல் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மதுரை திருப்புரங்குன்றம் கட்சி அலுவலகத்தில் விருதுநகர் எம்.பி. மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய எம்.பி மாணிக்கம் தாகூர், “மதுரைக்கு வந்த ஜே.பி.நட்டா இரண்டு பொய்களை கூறியுள்ளார்.

முதல் பொய் மதுரை எம்ய்ஸ் மருத்துவமனை. இரண்டாவது பொய் மதுரை விமான நிலையத்தில் விரிவாக்க பணி நின்றுவிட்டதாகக் கூறியுள்ளார். அது முழுவதும் பொய்.

அடுத்ததாக பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை முரணாகவே பேசுகிறார். தப்பான தகவல்களை பேசி வருகிறார். அவர் அரசியலில் தன்னை பெரிய புரட்சியாளர் என்று நினைக்கொள்கிறார். ஆனால் உண்மையில் மக்கள் மத்தியில் அவர் நகைச்சுவை நடிகராக பார்க்கப்படுகிறது.

ராகுல் காந்தி பாத யாத்திரை குறித்து சிறுபிள்ளத்தணமாக கருத்துகளை பேசி வருகிறார். அதேவேளையில் உண்மை பேசி, மக்களிடையே நம்பிக்கையை பெற்று வருகிறார். எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories