தமிழ்நாடு

தனியாக செல்லும் இளம் பெண்களிடம் அத்துமீறிய வாலிபர்.. கைது செய்த போலிஸ்: நடந்தது என்ன?

தனியாக செல்லும் பெண்களிடம் பாலியல் அத்துமீறிய வாலிபரை போலிஸார் கைது செய்தனர்.

தனியாக செல்லும் இளம் பெண்களிடம் அத்துமீறிய வாலிபர்.. கைது செய்த போலிஸ்: நடந்தது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை அடுத்த நங்கநல்லூர் பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் கடந்த 10ம் தேதி வேளச்சேரி எம்.ஆர்.டி.எஸ் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவரை வழிமறித்த வாலிபர் ஒருவர் வழிகேட்பதுபோல் அந்த பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இதனால் அந்தப் பெண் அதிர்ச்சியடைந்து சத்தம்போட்டுள்ளார்.

உடனே அந்த வாலிபர் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார். பின்னர் பாதிக்கப்பட்ட பெண் இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

பின்னர் அந்தப் பகுதியிலிருந்து சி.சி.டி.வி காட்சிகளை போலிஸார் ஆய்வு செய்தனர். இதில் பள்ளிக்கரனை பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் என்ற வாலிபர் தான் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது தெரியவந்தது.

பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில் தனியாகச் செல்லும் பெண்களைக் குறிவைத்து அவர்களிடம் தொடர்ச்சியாக பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து போலிஸார் அந்த வாலிபரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

banner

Related Stories

Related Stories