தமிழ்நாடு

தமிழகத்தில் ஒரே நாளில் 94 பேர் பலி... சென்னையில் 3வது நாளாக 4 ஆயிரத்தைத் தாண்டிய கொரோனா பாதிப்பு!

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10 லட்சத்து 97 ஆயிரத்து 672 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் ஒரே நாளில் 94 பேர் பலி... சென்னையில் 3வது நாளாக 4 ஆயிரத்தைத் தாண்டிய கொரோனா பாதிப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தமிழகத்தில் மேலும் 15,684 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10 லட்சத்து 97 ஆயிரத்து 672 ஆக உயர்ந்துள்ளது.

தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிக்கையின்படி, புதிதாக 15,684 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 10,97,672 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இன்று 13,625 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் இதுவரை 9,76,876 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 1,07,145 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 94 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் மொத்த பலி எண்ணிக்கை 13,651 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்று ஒரே நாளில் 4,250 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் இதுவரை மொத்தம் 3,14,074 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இதுவரை 2,17,63,365 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 1,15,642 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories