தமிழ்நாடு

தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம் தகவல்!

குமரிக்கடலில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.

தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம் தகவல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

குமரிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியின் கடலோர மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் அடுத்த 24 மணிநேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது.

அதேபோல, தஞ்சை, திருவாரூர், கடலூர், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம் தகவல்!

மேலும், நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் மாலை மற்றும் இரவில் லேசான மழை பெய்யும் எனவும் கூறப்பட்டுள்ளது.

குமரி மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் 40-50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்ல வேண்டாம் என வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories