தமிழ்நாடு

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் - சென்னைக்கும் நல்ல செய்தி இருக்கிறது!

குமரிக்கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் - சென்னைக்கும் நல்ல செய்தி இருக்கிறது!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

குமரிக்கடல் ஒட்டியுள்ள வங்கக்கடலில் வளிமண்டல சுழற்சி ஏற்பட்டுள்ளதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பெரும்பாலான இடங்களில் அடுத்த 24 மணிநேரத்திற்கு கனமழையும், ஒரு சில இடங்களில் மிக கனமழையும் பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு போன்ற மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார்.

மேலும், சென்னையை பொறுத்தவரை அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழையும், ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என கூறியுள்ளார்.

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் - சென்னைக்கும் நல்ல செய்தி இருக்கிறது!

மீனவர்களுக்கான எச்சரிக்கையை பொறுத்தவரையில், 40-50 கி.மீ வேகத்திற்கு சூறாவளி காற்று வீச வாய்ப்புள்ளதால் கன்னியாகுமரி ஒட்டிய கடற்பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்லவேண்டாம் என கூறப்பட்டுள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 5 மாவட்டங்களில் மிக கனமழை பெய்துள்ளது. அதிகபட்சமாக நாகை தலைஞாயிறில் 16 செ.மீ, புதுக்கோட்டையில் 14 செ.மீ, திருவாரூர் குடவாசலில் 13 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

banner

Related Stories

Related Stories