தமிழ்நாடு

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து மனிதச் சங்கிலிப் போராட்டத்துக்கு சிபிஎம் ஆதரவு!

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து 596 கிலோ மீட்டர் தூரம் நடைபெறும் மனிதச் சங்கிலிப் போராட்டத்திற்கு சிபிஐ(எம்) ஆதரவு அளித்து பங்கேற்கும் என கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து மனிதச் சங்கிலிப் போராட்டத்துக்கு சிபிஎம் ஆதரவு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து 596 கிலோ மீட்டர் தூரம் “மனிதச் சங்கிலிப் போராட்டம் நடைபெறுகிறது. இந்த போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ஆதரவு அளித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியதாவது, " காவிரி டெல்டா மாவட்டங்களைப் பாலைவனமாக்கி, தமிழக விவசாயிகளின் வாழ்வதாரத்தை அடியோடு அழிக்கும் வகையில் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் எரிவாயு உள்ளிட்ட பல்வேறு பேரழிவுத் திட்டங்களை மத்திய பாஜக அரசும், மாநில அதிமுக அரசும் திட்டமிட்டு செயல்படுத்த முனைந்து வருகின்றன.

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்தும், டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டுமென வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகிறது. தற்போது ஜூன் 5ந் தேதி முதல் ஜுன் 10ம் தேதி வரை டெல்டா மாவட்டங்களில் இருசக்கர வாகன பிரச்சாரத்தையும் மேற்கொண்டு வருகிறது.

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து மனிதச் சங்கிலிப் போராட்டத்துக்கு சிபிஎம் ஆதரவு!

இந்நிலையில், நம்மாழ்வாரால் தொடங்கப்பட்ட “பேரழிப்பிற்கு எதிரான பேரியக்கம்” சார்பில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து 2019 ஜூன் 12ந் தேதி மாலை 5.30 மணி முதல் 6 மணி வரை விழுப்புரம் மாவட்டத்திலிருந்து புதுச்சேரி, கடலூர், காரைக்கால், நாகை, திருவாரூர், புதுக்கேட்டை, தஞ்சாவூர், இராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் வரையிலான 596 கிலோ மீட்டர் தூரம் “மனிதச் சங்கிலிப் போராட்டத்தை” நடத்தவுள்ளனர். இப்போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவினையும் கேட்டுள்ளது.

விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும், விளை நிலங்களை காப்பாற்றவும் நடைபெறும் இந்த மனித சங்கிலிப் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தனது முழு ஆதரவினை தெரிவித்துக் கொள்கிறது.

மேற்கண்ட மாவட்டங்களில் நடைபெறும் இந்த மனிதசங்கிலிப் போராட்டத்தில் கட்சி அணிகள் முழுமையாக கலந்து கொண்டு கண்டனக் குரலெழுப்பிட வேண்டுமெனவும் மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது. என அதில் குறிப்பிடப்பட்டுள்ளதது.

banner

Related Stories

Related Stories