தமிழகத்தில் வேலூர் அல்லாத, 38 தொகுதிகளுக்கான மக்களவைத் தேர்தலும், 18 தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவும் காலை 7 மணிமுதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
நண்பகல் 1 மணி வரையிலான நிலவரப்படி தமிழகம் முழுவதும் 39.49% ஆக வாக்குகள் பதிவாகியிருந்தன. இதில், அதிகபட்சமாக நாமக்கல் தொகுதியில் 41.56% வாக்குகள் பதிவாகின.
இந்நிலையில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி தமிழகத்தில் 52.02 % வாக்குகள் பதிவாகியிருப்பதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ அறிவித்தார். அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 56.85% வாக்குகள் பதிவாகியுள்ளன.
அதேபோல், 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் 55.97% வாக்குகள் பதிவாகியுள்ளது எனவும்,தெரிவித்தார்.