டெல்லியில் காங்கிரஸ் அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் ராகுல்காந்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஜிஎஸ்டி மற்றும் பணமதிப்பிழப்பு நடவடிக்கை என்ற பெயரால் நாட்டின் பொருளாதாரத்தை மோடி சீரழித்து விட்டார் என்றும், காங்கிரசின் ஏழைகளுக்கு நிதி வழங்கும் திட்டம் நாட்டின் பொருளாதாரத்தை சீரமைக்கும் என்றார்.
மேலும் இந்திய ராணுவம் தமது தனிப்பட்ட சொத்துபோல பிரதமர் மோடி பேசி வருவதாக ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்தார். வீரர்களின் தியாகத்தை தமது சாதனையாக பிரதமர் மோடி பேசுவது ராணுவத்தையே அவமதிப்பதாகும் என்று ராகுல்காந்தி தெரிவித்தார்.
2 கோடி வேலைவாய்ப்பு என்று கூறிய மோடியிடம் வேலை எங்கே என மக்கள் கேட்பதாக தெரிவித்த ராகுல்காந்தி, சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்-ல் மோடி கருத்து காங்கிரசை அல்ல, ராணுவத்தை விமர்சிக்கிறது என்று ராகுல்காந்தி தெரிவித்தார். நாட்டின் காவலாளி திருடர் என்ற கோஷத்தை நான் எப்போதும் முன்னெடுத்து செல்வேன் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்தார்.