மு.க.ஸ்டாலின்

"சகோதரர் மு.க.ஸ்டாலின் மீண்டும் திமுக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்" -வைகோ!

ஆருயிர் சகோதரர் மாண்புமிகு தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள், மீண்டும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

"சகோதரர் மு.க.ஸ்டாலின் மீண்டும் திமுக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்" -வைகோ!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

திமுக ஜனநாயகமுறைப்படி நடைபெற்ற உள்கட்சி தேர்தல் சுமுமாக முடிவடைந்து இரண்டாவது முறையாக திமுகவின் தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றுள்ளார். அதைத் தொடர்ந்து அவருக்கு பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.

இந்த நிலையில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஜனநாயக முறைப்படி இந்தியாவில் உள்ள மற்ற எல்லா அரசியல் கட்சிகளுக்கும் முன்மாதிரியாக, இலக்கணமாக திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தலைமையேற்று நடத்தி வரும் முதலமைச்சர் ஆருயிர் சகோதரர் மாண்புமிகு தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள், மீண்டும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

"சகோதரர் மு.க.ஸ்டாலின் மீண்டும் திமுக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்" -வைகோ!

தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, டாக்டர் கலைஞர் வழியில் சின்னஞ் சிறு பிராயம் முதல் திராவிட இயக்கக் கொள்கைகளை வென்றெடுப்பதில் அடக்குமுறைகளைச் சந்தித்து, பல்வேறு பொறுப்புகளிலும் வெற்றிகரமாக இயங்கி, இன்றைக்கு திராவிட மாடல் ஆட்சியை இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் வழிகாட்டும் மாநிலமாக நடத்தி வெற்றி கண்டிருக்கிறார்கள். பிற நாடுகளின் அரசுகளும் திராவிட மாடல் ஆட்சியை பின்பற்றுகிற காலம் வெகு தூரத்தில் இல்லை.

அவர்கள் மென்மேலும் வெற்றிபெற இதயபூர்வமாக வாழ்த்துகிறேன். மேலும் பல்லாண்டு காலம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக வழிநடத்திச் செல்ல வேண்டி விழைகிறேன்.

"சகோதரர் மு.க.ஸ்டாலின் மீண்டும் திமுக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்" -வைகோ!

திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளராக மாண்புமிகு துரைமுருகன் அவர்களும், பொருளாளராக மானமிகு டி.ஆர்.பாலு அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கும்,முதன்மைச் செயலாளராக மாண்புமிகு கே.என்.நேரு அவர்களும், துணைப் பொதுச்செயலாளர்களாக மாண்புமிகு ஐ.பெரியசாமி, மாண்புமிகு க.பொன்முடி, மானமிகு ஆ.இராசா, மானமிகு சகோதரி கனிமொழி, மானமிகு அந்தியூர் செல்வராஜ் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டிருப்பதற்கும் மகிழ்ச்சியோடு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்." என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories