இந்தியா

மின்வேலியில் சிக்கி உயிரிழந்த பெண் புலி.. ஒன்றாக கறிவைத்து உண்ட கிராம மக்கள்.. ஆந்திராவில் அதிர்ச்சி !

மின்வேலியில் சிக்கி உயிரிழந்த புலியை வெட்டி கறிவைத்து உண்ட கிராம மக்களின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மின்வேலியில் சிக்கி உயிரிழந்த பெண் புலி.. ஒன்றாக கறிவைத்து உண்ட கிராம மக்கள்.. ஆந்திராவில் அதிர்ச்சி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள காடுகளில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் புலிகள் வாழ்ந்து வருகிறது. மேலும், இந்த காட்டு பகுதியில் யானை, காட்டுப்பன்றி, காட்டெருமை போன்ற விலங்குகளில் அதிக எண்ணிக்கையில் இருக்கின்றன.

இந்த காட்டு பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் யானை, காட்டுப்பன்றி போன்ற விலங்குகள் அடிக்கடி வந்து விளைநிலங்களை சேதப்படுத்துவதால் பயிர்களை காப்பாற்ற கிராம மக்கள் மின்வேலிகளை அமைத்துள்ளனர். சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள இந்த வகை வேலிகளை வனத்துறையினர் வந்து அகற்றினாலும் தொடர்ந்து இந்த செயல் நடந்துவருகிறது.

மின்வேலியில் சிக்கி உயிரிழந்த பெண் புலி.. ஒன்றாக கறிவைத்து உண்ட கிராம மக்கள்.. ஆந்திராவில் அதிர்ச்சி !

மேலும், இந்த மின்வேலிகளில் சிக்கி வனவிலங்குகள் உயிரிழப்பதும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், இந்த பகுதியில் உள்ள ஆக்கப்பள்ளி என்ற கிராமத்தில் பெண் புலி ஒன்று விளைநிலம் அருகே வந்துள்ளது. அப்போது அங்கு வைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி இந்த புலி பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

இதனைக் கண்ட கிராமவாசிகள் அந்த புலியை வெட்டி அதை கறியாக்கி கிராம மக்கள் அனைவர்க்கும் குறிப்பிட்ட அளவு கொடுத்துள்ளனர். ஆனால், இந்த விவகாரத்தில் சிலருக்கு குறைந்த அளவே புலி கறி வழங்கப்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த சிலர் இது தொடர்பாக வனத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.

மின்வேலியில் சிக்கி உயிரிழந்த பெண் புலி.. ஒன்றாக கறிவைத்து உண்ட கிராம மக்கள்.. ஆந்திராவில் அதிர்ச்சி !

பின்னர் இது தொடர்பாக விசாரிக்க வந்த வனத்துறையினரை கிராமத்துக்குள் விடாமல் கிராமமக்கள் தடுத்ததால் கூடுதல் படையினரை அழைத்துக்கொண்டு வனத்துறையினர் கிராமத்துக்குள் நுழைந்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 12 பேரை முதற்கட்டமாக கைது செய்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories