இந்திய பொருளாதார வீழ்ச்சி குறித்து பொருளாதாரத்துக்காக நோபல் பரிசு வென்ற அபிஜித் பானர்ஜியை இடதுசாரி சிந்தனையாளர் என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் விமர்சித்திருந்தார்.
இதனையடுத்து பியூஷ் கோயலின் பேச்சுக்கு நாடெங்கும் பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் பியூஷ் கோயலின் பேச்சுக்கு எதிர்ப்பு ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் காங்கிரஸ் உத்தர பிரதேச கிழக்கு மாநில பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
அதில், சீரழிந்து வரும் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு பதிலாக பாஜக அரசு காமெடி சர்க்கஸை நடத்தி வருகிறது என பிரியங்கா கடுமையாக விமர்சித்துள்ளார்.