இந்தியா

அதி தீவிர புயலாக வலுப்பெற்றது வடமேற்கு திசையில் நகரும் ஃபானி: வானிலை மையம் எச்சரிக்கை!

சென்னைக்கு தென் மேற்கே ஃபானி புயல் நிலைகொண்டுள்ளதால் வட தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அதி தீவிர புயலாக வலுப்பெற்றது வடமேற்கு திசையில் நகரும் ஃபானி: வானிலை  மையம் எச்சரிக்கை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

வடமேற்கு திசையில் ஃபானி மிக அதி தீவிர புயலாக உருபெற்று மணிக்கு 22 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்வதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வங்கக்கடலில் உருவான ஃபானி புயல் அதிதீவிர புயலாக மாறியது. தென் மேற்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த இந்த புயல் நேற்று மிகவும் அதி தீவிர புயலாக உருப்பெற்று மேற்கு, வடமேற்கு திசையில் மணிக்கு 22 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

அதி தீவிர புயலாக வலுப்பெற்றது வடமேற்கு திசையில் நகரும் ஃபானி: வானிலை  மையம் எச்சரிக்கை!

ஃபானி புயல் ஒடிசா மாநிலம் பூரியில் இருந்து தெற்கு, தென்மேற்கு திசையில் 730 கிலோ மீட்டர் தொலைவிலும், விசாகப்பட்டினத்தில் இருந்து தெற்கு, தென்கிழக்கே 510 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது மணிக்கு 205 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த புயல் காரணமாக வட தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories