தி.மு.க

”அ.தி.மு.க-வுக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்” - தி.மு.கவில் இணைந்த அ.தி.மு.க வேட்பாளர்!

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் 14வது வார்டு அ.தி.மு.க வேட்பாளர் நாராயணன் தி.மு.க-வில் இணைந்துள்ளார்.

”அ.தி.மு.க-வுக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்” - தி.மு.கவில் இணைந்த அ.தி.மு.க வேட்பாளர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

ஊரக உள்ளாட்சி தேர்தலில் அனைத்து கட்சியினரும் தேர்தல் பணியை துவங்கியுள்ள நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் 14வது வார்டு அ.தி.மு.க வேட்பாளர் நாராயணன் தி.மு.க-வில் இணைந்துள்ளார்.

புதுக்கோட்டை திராவிட முன்னேற்றக் கழகத்தின் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் எஸ்.ரகுபதி முன்னிலையில், மணமேல்குடி ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் 14வது வார்டு அ.தி.மு.க வேட்பாளர் நாராயணன் திராவிட முன்னேற்ற கழகத்தில் இணைந்தார்.

மணமேல்குடி ஒன்றியக் குழு உறுப்பினருக்கான தேர்தலில் 14வது வார்டில் அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் நாராயணன் தமது கட்சியின் ஒன்றிய செயலாளரிடம் நான் அ.தி.மு.க சார்பாக நிற்கவில்லை என்றும் நான் நின்றால் தோற்பது உறுதி எனவும், வேறு யாரையாவது போட்டியிடவைக்குமாறும் கூறியுள்ளார். ஆனால் அ.தி.மு.கவில் யாரும் போட்டியிட விரும்பாத காரணத்தினால் வலுக்கட்டாயமாக நாராயணன் வேட்பாளராக அறிவித்துள்ளனர்.

இதனால் விரக்தியடைந்த அ.தி.மு.க வேட்பாளர் நாராயணன் தான் போட்டியிட்டு அவமானப்படுவதைவிட திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்து மக்கள் பணியாற்றுவதே சிறந்தது என முடிவெடுத்து இன்று புதுக்கோட்டை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் ரகுபதி தலைமையில் அவரது இல்லத்தில் தன்னை திராவிட முன்னேற்ற கழகத்தில் இணைத்துக் கொண்டார்.

தொடர்ந்து பத்திரிகையாளர்களைச் சந்தித்த நாராயணன் அ.தி.மு.க மீது மக்கள் வெறுப்புணர்வு கொண்டிருப்பதாகவும் அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர்களும் அ.தி.மு.க தலைமை மீது கோபமாக இருப்பதாகவும், பொதுமக்கள் அ.தி.மு.கவுக்கு வாக்களிக்க தயாராக இல்லை என்பதை தான் முழுமையாக உணர்ந்துகொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த புதுக்கோட்டை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் எஸ்.ரகுபதி புதுக்கோட்டை மாவட்டத்தில் தி.மு.க அனைத்து இடங்களிலும் வெற்றி பெறுவது உறுதியாகி இருக்கிறது. புதுக்கோட்டை மாவட்ட அமைச்சர் விஜயபாஸ்கருக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கும் வகையில் இந்த நிகழ்வு அமைந்திருக்கிறது. ஏனைய அ.தி.மு.க பொறுப்பாளர்கள் வரும் நாட்களில் தி.மு.க-வில் இணைவார்கள் என்றும் தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories