உலகம்
இலங்கையை நாசமாக்கிய டிட்வா புயல்... 40 பேர் உயிரிழப்பு... ஏராளமானோர் காணாமல் போனதால் அதிர்ச்சி !
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் டிட்வா புயலாக உருமாறியது. இலங்கைக்கு மிக அருகில் நிலைகொண்ட இந்த புயல் காரணமாக இலங்கையில் பல்வேறு பகுதிகளிலும் மிககனமழை பதிவானது. இதனால் நாட்டின் அனைத்துப் பகுதிகளும் பாதிக்கப்பட்டன.
கனமழையால் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவு காரணமாக 40 பேர் உயிரிழந்துள்ளதாக இலங்கை பேரிடர் மேலாண்மை மையம் அறிவிப்பு. அதே போல வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டு மாயமான 21 பேரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், கொழும்பு துறையில் தங்கி உள்ள இந்தியாவின் விமானம் தாங்கி கப்பல் INS விக்ராந்தில் இருந்து ஹெலிகாப்டர்களை அனுப்ப இலங்கை அரசின் உத்தியோகபூர்வ கோரிக்கைக்கு இந்தியா ஒப்புதல் அளித்துள்ளது.வெள்ளநீர் சூழ்ந்த பகுதிகளில் சிக்கியுள்ள மக்களை மீட்கவும், அவசர உதவிகளை வழங்கவும் இந்த ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கையில் கடுமையான அழிவுகளை ஏற்படுத்தியுள்ள டிட்வா புயல் அடுத்ததாக தமிழக கடலோர பகுதிகளை நோக்கி நகர்ந்து வருவதால், கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. மேலும், தமிழ்நாட்டின் சில மாவட்டங்களுக்கு சிவப்பு நிற எச்சரிக்கையும், சில மாவட்டங்களுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
Also Read
-
”கற்பனை உலகத்தில் வாழ்கிறார் மோடி.. இதுதான் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க” : முரசொலி கடும் விமர்சனம்!
-
“உங்கள் வீட்டுப்பிள்ளை வேண்டுமா? எங்கிருந்தோ வந்து நாடகமாடுபவர் வேண்டுமா?” : பெரம்பூரில் முதல்வர் உரை!
-
”திராவிட மாடல் அரசின் திட்டங்கள் தொடர திமுக ஆட்சி வேண்டும்” : சென்னையில் அரவிந்த் கெஜ்ரிவால் பேச்சு!
-
”ஓய்வின்றி உழைப்போம்.. திராவிட மாடல் 2.O ஆட்சி அமைப்போம்” : 75,000 BLA2-க்களுடன் முதலமைச்சர் பேச்சு!
-
எதிர்க்கட்சியினரை முடக்க சதி : செல்வப்பெருந்தகை இல்லத்தில் வருமான வரித்துறை சோதனை - முதலமைச்சர் கண்டனம்!