உலகம்
"ரஷ்யாவுடனான போர் நிறுத்தத்துக்கு தயார்" - உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி அறிவிப்பு !
ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் தற்போது இரண்டு வருடத்தை தாண்டியுள்ள நிலையில் தற்போதும் உக்கிரமான நடந்து வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உக்ரைன் நாட்டின் ஏராளமான இராணுவ இலக்குகளை ரஷ்யப் படைகள் தாக்கி அழித்துள்ளன.
அதேபோல் உக்ரைன் தங்களைத் தற்காத்துக்கொள்ள, ரஷ்யப் படைகளுக்குப் பதிலடி கொடுத்து வருகிறது. போர் தொடங்கியதிலிருந்து அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக ஆயுதங்களை வழங்கி வருகின்றன.
இந்த போர் இத்தனை மாதம் கடந்தும் இவ்வளவும் நாட்கள் தொடர உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகள் அளித்துவரும் பொருளாதார மற்றும் ஆயுத உதவி முக்கிய காரணமாக இருந்து வருகிறது. இதனால் ரஷ்யாவுக்குள்ளும் தற்போது உக்ரைன் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.
எனினும் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற டிரம்ப் ரஷ்யாவுக்கு ஆதரவாகவும், உக்ரைனுக்கு எதிராகவும் கருத்து தெரிவித்தார். மேலும் சவுதி அரேபியாவில் உக்ரைன் - ரஷ்யா போர் நிறுத்தத்துக்கு வருமாறு அமெரிக்காவுக்கும் டிரம்ப் அழைப்பு விடுத்த நிலையில், விரைவில் அங்கு பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.
இந்த நிலையில், போர் நிறுத்தத்துக்கு தயாராக இருப்பதாகவும், அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாகவும் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார். உக்ரைனுக்கான ஆயுத உதவியை நிறுத்தவுள்ளதாக அமெரிக்கா அறிவித்த நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
”முதல்வர் விஜயின் போலீஸ் ராஜ்யம்.. உத்திரபிரேதசத்தை நினைவுபடுத்தும் கோவை சம்பவம்” : முரசொலி தலையங்கம்!
-
“தமிழ்நாடா, உத்தரபிரதேசமா? 15 நாள்.. 25 கொலைகள், 4 இரட்டைக் கொலைகள்” : எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி!
-
”தவெக ஆட்சியில் குற்றவாளிகளின் கூடாரமாக தமிழ்நாடு.. வாய் திறப்பாரா முதல்வர் விஜய்?” : முரசொலி விமர்சனம்!
-
”மேகதாது அணை உரிமையை விட்டுக்கொடுக்க முடியாது.. இப்போதாவது வாய் திறப்பாரா முதல்வர்” : கே.என்.நேரு கேள்வி!
-
தமிழ்நாடெங்கும் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு: திமுக இளைஞரணி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 9 தீர்மானங்கள் என்ன?