உலகம்
மெக்ஸிகோ, கனடாவில் இருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கு 25 % வரி : ஒத்திவைத்த டிரம்ப்... பின்னணி என்ன ?
மெக்ஸிகோ, கனடாவில் இருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கு 25 % வரி விதிக்கப்படும் நடவடிக்கையை 30 நாட்களுக்கு ஒத்திவைத்துள்ளார் டொனால்ட் டிரம்ப்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளராக டொனால்ட் டிரம்ப்பும், ஜனநாயக கட்சி வேட்பாளராக கமலா ஹாரிஸும் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் பதிவாக வாக்குகள் உடனடியாக எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்து.
இதில் அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்ட் டிரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டார். தேர்தல் பரப்புரையில்போதே அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால் மெக்ஸிகோ, கனடா, சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு அதிக வரி விதிக்கப்படும் என்று அறிவித்தார்.
அதன்படி அதிபரானதும் மெக்ஸிகோ, கனடாவில் இருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கு 25 % வரி விதித்து உத்தரவிட்டார். அதே போல சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு 10 % வரியும் விதித்து உத்தரவிட்டார். இதற்கு மெக்ஸிகோ, கனடா, சீனா ஆகிய நாடுகள் கண்டனம் தெரிவித்ததோடு, இதற்கு பதிலடி கொடுக்கப்படும் என்றும் அறிவித்தது.
இந்த நிலையில், மெக்ஸிகோ, கனடாவில் இருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கு 25 % வரி விதிக்கப்படும் நடவடிக்கையை 30 நாட்களுக்கு ஒத்திவைத்துள்ளார் டொனால்ட் டிரம்ப். மெக்ஸிகோ, கனடாவில் இருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கு அதிக வரி விதித்தால் அது அமெரிக்காவின் பொருளாதாரத்தை கடுமையாக பாதித்து பணவீக்கத்தை அதிகரிக்கும் என பொருளாதார நிபுணர்கள் அச்சம் தெரிவித்ததால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
Also Read
-
ரூ.175 கோடியில் 22 புதிய திட்டப் பணிகள்: எந்த மாவட்டத்தில் என்னென்ன பணிகளை தொடங்கி வைத்தார் CM MK Stalin!
-
3 மாவட்டங்களில் டைடல் நியோ பூங்காக்கள்: ரூ.117.65 கோடியில் அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
திருவான்மியூர் TO உத்தண்டி - 13.30 கி.மீ நீளத்திற்கு ரூ.2100 கோடியில் மேம்பாலம் : அடிக்கல் நாட்டிய CM!
-
“திருச்சியில் திரள்வோம் . . திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைப்போம்” : அமைச்சர் கே.என்.நேரு அழைப்பு!
-
வெட்கமில்லாமல் அறிக்கை விடும் பழனிசாமி : முரசொலி தலையங்கம் கடும் தாக்கு!