உலகம்
பதவி விலகும் முன் ஜோ பைடன் வழங்கிய உத்தரவு: கொதித்தெழுந்த ரஷ்யா... அணு ஆயுத கொள்கையை மாற்றியதால் அச்சம் !
ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் தற்போது இரண்டு வருடத்தை தாண்டியுள்ள நிலையில் தற்போதும் உக்கிரமான நடந்து வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உக்ரைன் நாட்டின் ஏராளமான இராணுவ இலக்குகளை ரஷ்யப் படைகள் தாக்கி அழித்துள்ளன.
அதேபோல் உக்ரைன் தங்களைத் தற்காத்துக்கொள்ள, ரஷ்யப் படைகளுக்குப் பதிலடி கொடுத்து வருகிறது. போர் தொடங்கியதிலிருந்து அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக ஆயுதங்களை வழங்கி வருகின்றன.
இந்த போர் இத்தனை மாதம் கடந்தும் இவ்வளவும் நாட்கள் தொடர உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகள் அளித்துவரும் பொருளாதார மற்றும் ஆயுத உதவி முக்கிய காரணமாக இருந்து வருகிறது. அதே நேரம் தொலைதூரம் தாக்கும் ஆயுதங்களை ரஷ்யாவுக்குள் பயன்படுத்த அமெரிக்கா தொடர்ந்து அனுமதி மறுத்து வந்தது.
இந்த நிலையில், ரஸ்யாவுக்குள் தொலைதூரம் தாக்கும் ஆயுதங்களை ரஷ்யாவுக்குள் பயன்படுத்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அனுமதி வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வென்ற நிலையில், அவர் அதிபராக பதவியேற்கும் முன்னர் இந்த அனுமதியை ஜோ பைடன் வழங்கியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அதே நேரம் ஜோ பைடனின் இந்த முடிவு பேரழிவுகரமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், அமெரிக்காவின் இந்த முடிவால் தனது அணுஆயுத கொள்கைகளின் மாற்றத்தை கொண்டுவர ரஷ்யா திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
Also Read
-
ஏன்? எப்படி? என்ன? - மக்களவையில் அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்த திமுக எம்.பி.-க்கள் - விவரம் உள்ளே!
-
பயோ மைனிங் முறை... சென்னை மாநகராட்சியில் 52.64 இலட்சம் மெட்ரிக் டன் திடக்கழிவுகள் அகற்றம்!
-
தமிழ்நாடு உலகளாவிய சுற்றுலா உச்சி மாநாடு: ரூ.22,794 கோடி முதலீடு..127 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்.. விவரம்
-
Budget2026 : “தேர்தல் நாடகத்தில் கூட தமிழ்நாடு என்றால் பாஜக புறக்கணிக்கிறது..” - அமைச்சர் ரகுபதி கண்டனம்!
-
‘ஜூம்லாவும், ஒப்பனையும்’ நிறைந்த பட்ஜெட்! திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் கி.வீரமணி கடும் விமர்சனம்!