உலகம்
பதவி விலகும் முன் ஜோ பைடன் வழங்கிய உத்தரவு: கொதித்தெழுந்த ரஷ்யா... அணு ஆயுத கொள்கையை மாற்றியதால் அச்சம் !
ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் தற்போது இரண்டு வருடத்தை தாண்டியுள்ள நிலையில் தற்போதும் உக்கிரமான நடந்து வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உக்ரைன் நாட்டின் ஏராளமான இராணுவ இலக்குகளை ரஷ்யப் படைகள் தாக்கி அழித்துள்ளன.
அதேபோல் உக்ரைன் தங்களைத் தற்காத்துக்கொள்ள, ரஷ்யப் படைகளுக்குப் பதிலடி கொடுத்து வருகிறது. போர் தொடங்கியதிலிருந்து அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக ஆயுதங்களை வழங்கி வருகின்றன.
இந்த போர் இத்தனை மாதம் கடந்தும் இவ்வளவும் நாட்கள் தொடர உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகள் அளித்துவரும் பொருளாதார மற்றும் ஆயுத உதவி முக்கிய காரணமாக இருந்து வருகிறது. அதே நேரம் தொலைதூரம் தாக்கும் ஆயுதங்களை ரஷ்யாவுக்குள் பயன்படுத்த அமெரிக்கா தொடர்ந்து அனுமதி மறுத்து வந்தது.
இந்த நிலையில், ரஸ்யாவுக்குள் தொலைதூரம் தாக்கும் ஆயுதங்களை ரஷ்யாவுக்குள் பயன்படுத்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அனுமதி வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வென்ற நிலையில், அவர் அதிபராக பதவியேற்கும் முன்னர் இந்த அனுமதியை ஜோ பைடன் வழங்கியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அதே நேரம் ஜோ பைடனின் இந்த முடிவு பேரழிவுகரமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், அமெரிக்காவின் இந்த முடிவால் தனது அணுஆயுத கொள்கைகளின் மாற்றத்தை கொண்டுவர ரஷ்யா திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
Also Read
-
தென்மாவட்டங்களில் கொட்டித் தீர்த்த கனமழை... ஆட்சித் தலைவர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை !
-
பருவமழையை எதிர்கொள்ள மின்சாரத்துறை தயார்... பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கிய அமைச்சர் சிவசங்கர் !
-
Elimination-ல் 5 பேர்! வெளியேறபோவது அப்சராவா? கமருதீனா? திக்திக் தருணங்களால் பரபரப்பாகும் BB வீடு!
-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் “என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி” பயிற்சிக் கூட்டம் : எப்போது?
-
திராவிடம் என்றால் என்ன என்றே தெரியாது என்றவர்தான் எடப்பாடி பழனிசாமி - அமைச்சர் சிவசங்கர் விமர்சனம் !