உலகம்
ரஷ்ய எண்ணைய் சுத்திகரிப்பு ஆலை மீது உக்ரைன் தாக்குதல் : பற்றியெரிந்த கிரீமியா எண்ணெய் கிடங்கு !
ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் தற்போது இரண்டு வருடத்தை தாண்டியுள்ள நிலையில் தற்போதும் உக்கிரமான நடந்து வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உக்ரைன் நாட்டின் ஏராளமான இராணுவ இலக்குகளை ரஷ்யப் படைகள் தாக்கி அழித்துள்ளன.
அதேபோல் உக்ரைன் தங்களைத் தற்காத்துக்கொள்ள, ரஷ்யப் படைகளுக்குப் பதிலடி கொடுத்து வருகிறது. போர் தொடங்கியதிலிருந்து அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக ஆயுதங்களை வழங்கி வருகின்றன.
இந்த போர் இத்தனை மாதம் கடந்தும் இவ்வளவும் நாட்கள் தொடர உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகள் அளித்துவரும் பொருளாதார மற்றும் ஆயுத உதவி முக்கிய காரணமாக இருந்து வருகிறது. இதனால் ரஷ்யாவுக்குள்ளும் தற்போது உக்ரைன் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.
இதனிடையே உக்ரைன் ராணுவம் ரஷ்யாவின் குர்ஸ்க் பிராந்தியத்தில் ஒரு எதிர்பாராத அதிரடி தாக்குதல் நடத்தி ரஷ்யாவுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியது. இந்த நிலையில் ரஷ்யாவின் ராணுவத்துக்கு எரிபொருள் விநியோகம் செய்யும் கிரிமியாவில் உள்ள முக்கியமான எண்ணைய் முனையத்தின் மீது உக்ரைன் கடுமையான தாக்குதல் ஒன்றை மேற்கொண்டுள்ளது.
கிரிமியாவில் உள்ள ஃபியோடோசியா ஆலை அந்த பகுதியில் உள்ள மிகப் பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையாக திகழ்ந்து வருகிறது. இந்த ஆலையின் மீது கடந்த மாா்ச் மாதமும் உக்ரைன் தாக்குதல் நடத்தியிருந்தது. ட்ரோன்கள் மூலம் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக உக்ரைன் தெரிவித்துள்ள நிலையில், ஃபியோடோசியா ஆலை தீப்பிடித்தது உண்மைதான் என்று ரஷ்ய தரப்பிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
ஏன்? எப்படி? என்ன? - மக்களவையில் அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்த திமுக எம்.பி.-க்கள் - விவரம் உள்ளே!
-
பயோ மைனிங் முறை... சென்னை மாநகராட்சியில் 52.64 இலட்சம் மெட்ரிக் டன் திடக்கழிவுகள் அகற்றம்!
-
தமிழ்நாடு உலகளாவிய சுற்றுலா உச்சி மாநாடு: ரூ.22,794 கோடி முதலீடு..127 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்.. விவரம்
-
Budget2026 : “தேர்தல் நாடகத்தில் கூட தமிழ்நாடு என்றால் பாஜக புறக்கணிக்கிறது..” - அமைச்சர் ரகுபதி கண்டனம்!
-
‘ஜூம்லாவும், ஒப்பனையும்’ நிறைந்த பட்ஜெட்! திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் கி.வீரமணி கடும் விமர்சனம்!