உலகம்
காசாவைத் தொடர்ந்து லெபனான் : இஸ்ரேலின் வான்வெளித் தாக்குதலில் 274 பேர் உயிரிழப்பு... ஐ.நா கண்டனம் !
கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி, ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகளை அனுப்பி தாக்குதல் நடத்தியது.இதில் நூற்றுக்கணக்கான இஸ்ரேல் குடிமக்கள் மற்றும் வெளிநாட்டினர் கொல்லப்பட்டனர். அதோடு ஏராளமானோரை ஹமாஸ் அமைப்பு பணயக்கைதிகளாக பிடித்து வைத்தது.ஹமாஸ் அமைப்பின் இந்த நடவடிக்கைக்கு பதிலடியாக காசாவில் இஸ்ரேல் மேற்கொண்ட போர் தொடங்கி 6 மாதங்கள் நிறைவடைந்த நிலையில் இந்த தாக்குதலில் 40 ஆயிரத்துக்கும் அதிகமான அப்பாவி பாலஸ்தீன குடிமக்கள் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள காசா சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
இஸ்ரேல் ஹமாஸ் அமைப்புக்கு எதிராக போரினை அறிவித்ததும் ஹமாஸின் கூட்டாளியும், லெபனானில் செயல்படும் அமைப்புமான ஹிஸ்புல்லா இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. இதனால் இஸ்ரேல் லெபனானில் செயல்படும் ஹிஸ்புல்லா அமைப்பினர் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இஸ்ரேலின் முக்கிய இலக்குகள் மீது ஹிஸ்புல்லாவும் தாக்குதல் நடத்தி வருகிறது.
சில நாட்களுக்கு முன்னர் ஹிஸ்புல்லா உள்ளிட்ட லெபனான் நாட்டில் ஆயுதக் குழுவினர் தகவல் தொடர்புக்காக பயன்படுத்தும் ஆயிரக்கணக்கான பேஜர்கள் ஒரே நேரத்தில் வெடித்து சிதறியதில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதலை இஸ்ரேல் நடத்தியதாக ஹிஸ்புல்லா குற்றம் சாட்டியது.
அதனைத் தொடர்ந்து ஹிஸ்புல்லா அமைப்பினரை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய வான்வெளி தாக்குதலில் ஹிஸ்புல்லாவின் முக்கிய படை தளபதி இப்ராஹிம் அகில் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அதோடு இஸ்ரேலுடன் இனி நேருக்கு நேர் போரிட முடிவு செய்துள்ளதாக ஹிஸ்புல்லா அமைப்பு அறிவித்தது
இந்த நிலையில், லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பினரை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 21 குழந்தைகள், 39 பெண்கள் உள்பட 274 பேர் உயிரிழந்ததாக லெபனான் அரசு அறிவித்துள்ளது. மேலும் இந்த தாக்குதலில் 5,000 பேர் காயமடைந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை லெபனானில் சிறிய அளவிலான தாக்குதல் மட்டுமே முன்னெடுக்கப்பட்ட நிலையில், தற்போது இவ்வளவு பெரிய தாக்குதலை இஸ்ரேல் முன்னெடுத்துள்ளது லெபனானை போருக்கு இழுக்கும் வகையில் இருப்பதாக கருதப்படுகிறது. இந்த தாக்குதலுகு லெபனான் அரசு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. மேலும் ஐ.நா அமைப்பும் இந்த தாக்குதலை கடுமையாக கண்டித்துள்ளது.
Also Read
-
‘சமக்ர சிக்ஷா’ திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கான நிதியை 34% குறைத்தது ஏன்?: ராஜாத்தி சல்மா எம்.பி கேள்வி!
-
“ஆசிரியர்கள் பற்றாக்குறையைத் தீர்க்க ஒன்றிய அரசு எடுத்த நடவடிக்கை என்ன?” : திருச்சி சிவா எம்.பி கேள்வி!
-
“சென்னை இராஜீவ்காந்தி மருத்துவமனையில் ‘நரம்பியல் துறை’ கட்டடம் விரைவில் திறக்கப்படும்!” : அமைச்சர் மா.சு!
-
“நெல்வயல்களில் தேங்கியுள்ள வெள்ள நீரை உடனடியாக வடிக்க வேண்டும்!” : அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தல்!
-
“உலகத்திலேயே முதன்முறையாக உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரம்!” : உதயநிதி பெருமிதம்!