உலகம்
”இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துவோம்” - துருக்கி அதிபர் பகிரங்க எச்சரிக்கை... பின்னணி என்ன ?
இஸ்ரேல் -பாலஸ்தீனம் இடையே கடந்த பல ஆண்டுகளாக பிரச்சனை இருந்து வருகிறது. பாலஸ்தீன பகுதியில் இஸ்ரேல் தொடர்ந்து மேற்கொண்டு வந்த குடியேற்றம் மற்றும் அல்- அக்ஸா மசூதி பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்ட ஆக்கிரமிப்பு போன்றவற்றால் அங்கு பரபரப்பு ஏற்பட்டு வந்தது.
இந்த சூழலில் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி, இஸ்ரேலின் நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகளை அனுப்பி தாக்குதல் நடத்தியது. மேலும், இஸ்ரேலின் பல பகுதியில் நுழைந்து ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். இதில் நூற்றுக்கணக்கான இஸ்ரேல் குடிமக்கள் மற்றும் வெளிநாட்டினர் கொல்லப்பட்டனர். அதோடு ஏராளமானோரை ஹமாஸ் அமைப்பு பணயக்கைதிகளாக பிடித்து வைத்தது.
ஹமாஸ் அமைப்பின் இந்த நடவடிக்கைக்கு பதிலடியாக இஸ்ரேல் ராணுவம் காசா பகுதியில் ராணுவத்தை அனுப்பியுள்ளது. அதோடு இஸ்ரேல் விமானங்கள் மூலமும், ஏவுகணைகளை அனுப்பியும் காசாவின் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். தற்போதைய நிலையில், 90 சதவீத காசாவின் பரப்பு இஸ்ரேலில் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த தாக்குதல் இதுவரை 39 ஆயிரத்துக்கும் அதிகமான அப்பாவி பாலஸ்தீன குடிமக்கள் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் அமைப்பு அறிவித்துள்ளது
இந்த போரில் சிரியா, ஈரான், லெபனான், துருக்கி ஆகிய நாடுகள் இஸ்ரேலுக்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ளன. மேலும், சிரியா, ஈரான், லெபனான் ஆகியவை உதவுவதாக இஸ்ரேல் கூறி அந்த நாடுகளின் மீது சிறிய அளவிலான தாக்குதலை மேற்கொண்டுள்ளது.
இந்த நிலையில், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த வேண்டும் என துருக்கி அதிபர் எர்டோகன் தெரிவித்துள்ளது பிராந்தியத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பேசிய அவர், “துருக்கி வலிமையுடன் இருந்திருந்தால் இஸ்ரேல் பாலஸ்தீனத்துக்கு எதிராக இதுபோன்ற மோசமான செயல்களை செய்திருக்காது.
லிபியா மற்றும் அசர்பைஜான் பிராந்தியம் மீது நமது ராணுவம் நுழைந்தது போன்று இஸ்ரேல் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளார். துருக்கியின் இந்த அறிவிப்பு இஸ்ரேலில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. துருக்கி அமெரிக்காவின் நேட்டோ அமைப்பில் உறுப்பினராக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
’தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்’ : தமிழ்நாடு முழுவதும் செப்.20,21 தீர்மான ஏற்புக் கூட்டங்கள்!
-
யார் பொறுப்பேற்பது? : விஜய்க்கு சென்னை உயர்நீதிமன்றம் சரமாரியாக கேள்வி!
-
முகத்தை மறைத்துக் கொண்டு வெளியேறுவது ஏன்? : பழனிசாமிக்கு தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணி கேள்வி!
-
“இதுக்கெல்லாம் துடிக்காத நெஞ்சம் முகமூடி வீடியோவை வெளியிட்டதால துடிக்குதோ” -அதிமுகவுக்கு குவியும் கண்டனம்
-
61 வயது மூதாட்டியிடம் 3 சவரன் தங்கநகை வழிப்பறி.. தவெக பிரமுகர் கைது.. விசாரணையில் ஷாக்!