உலகம்
நேபாளத்தில் ஏற்பட்ட விமான விபத்து : பயணம் செய்த அனைத்து பயணிகளும் உயிரிழந்ததாக அச்சம் !
காட்மண்டு திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சவுரியா ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ஒன்று இன்று காலை 19 பயணிகளுடன் பொக்காரா என்ற நகருக்கு புறப்பட்டுள்ளது. விமானம் கிளம்பி ஓடுபாதையில் சென்றுகொண்டிருந்தபோது திடிரென விமானம் அதன் கட்டுப்பாட்டை இழந்துள்ளது.
விமானத்தை கட்டுப்படுத்த விமானி முயற்சித்தும் அது பலன் கொடுக்காத நிலையில் ஓடுபாதையிலிருந்து சறுக்கிய விமானம் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் விமானம் உடனடியாக தீப்பற்றிய நிலையில், அதில் இருந்த பயணிகளால் வெளியேற முடியாத நிலை ஏற்பட்டது.
சம்பவம் குறித்த தகவல் அறிந்த மீட்பு படையினர் துரிதமாக மீட்பு பணியில் ஈடுபட்ட போதிலும், அதில் பயணம் செய்த பயணிகளை காக்க முடியாத நிலை ஏற்பட்டது. தற்போதைய தகவலின் படி விமானத்தில் பயணம் செய்த 19 பயணிகளும் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
டுதளத்தில் இருந்து வேகமாக மேலே எழ முயன்றதால் விபத்து நேர்ந்திருக்கலாம் என முதற்கட்ட ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது. கீழே விழுந்த விமானம் முற்றிலுமாக எரிந்த நிலையில் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
அமைச்சர் சரத்குமார் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டம் தொடரும் : தி.மு.க. மாணவரணி திட்டவட்டம்!
-
மீண்டும் மதமாற்ற தடைசட்டமா?; பா.ஜ.க அஜெண்டாவுக்கு வேலை பார்க்கும் த.வெ.க : தி.மு.க கண்டனம்!
-
‘பொறுப்பேற்று’ செயல்பட த.வெ.க அரசு மறுப்பதே, பிரச்சனைகள் அதிகரிக்கக் காரணம்! : கனிமொழி கண்டனம்!
-
“SofaModel அரசால் திணிக்கப்படும் இடைத்தேர்தல்.. மக்கள் பாடம் புகட்டுவார்கள்” - உதயநிதி ஸ்டாலின்!
-
டேக் டைவர்ஷன் என ஓடும் ரீல்ஸ் ஆட்சிக்கு.. மக்களே முற்றுப்புள்ளி வைப்பார்கள் - கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்!