உலகம்
நேபாளத்தில் ஏற்பட்ட விமான விபத்து : பயணம் செய்த அனைத்து பயணிகளும் உயிரிழந்ததாக அச்சம் !
காட்மண்டு திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சவுரியா ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ஒன்று இன்று காலை 19 பயணிகளுடன் பொக்காரா என்ற நகருக்கு புறப்பட்டுள்ளது. விமானம் கிளம்பி ஓடுபாதையில் சென்றுகொண்டிருந்தபோது திடிரென விமானம் அதன் கட்டுப்பாட்டை இழந்துள்ளது.
விமானத்தை கட்டுப்படுத்த விமானி முயற்சித்தும் அது பலன் கொடுக்காத நிலையில் ஓடுபாதையிலிருந்து சறுக்கிய விமானம் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் விமானம் உடனடியாக தீப்பற்றிய நிலையில், அதில் இருந்த பயணிகளால் வெளியேற முடியாத நிலை ஏற்பட்டது.
சம்பவம் குறித்த தகவல் அறிந்த மீட்பு படையினர் துரிதமாக மீட்பு பணியில் ஈடுபட்ட போதிலும், அதில் பயணம் செய்த பயணிகளை காக்க முடியாத நிலை ஏற்பட்டது. தற்போதைய தகவலின் படி விமானத்தில் பயணம் செய்த 19 பயணிகளும் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
டுதளத்தில் இருந்து வேகமாக மேலே எழ முயன்றதால் விபத்து நேர்ந்திருக்கலாம் என முதற்கட்ட ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது. கீழே விழுந்த விமானம் முற்றிலுமாக எரிந்த நிலையில் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
பிறந்தநாள் கொண்டாட்டம் என்ற பெயரில் அட்டகாசம் : பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் த.வெ.க-வினர்!
-
”இயற்கையின் ரகசியம்.. நீலகிரியில் அரிய வகை பறக்காத ஈ கண்டுபிடிப்பு.. ஆச்சரியத்தில் ஆழ்ந்த மக்கள்!”
-
அடுத்தடுத்து வெளிவரும் த.வெ.க நிர்வாகிகளின் மோசடி : ரூ.15 கோடி ஏமாற்றம்!
-
”தமிழ்த்தாய் வாழ்த்திற்கு மூன்றாம் இடம்.. ஆளுநரின் அஜெண்டாவிற்கு தலையாட்டிய விஜய்” : முரசொலி விமர்சனம்!
-
மீண்டும் அதிகாரப் போட்டி... தொடரும் கோஷ்டி மோதல்கள் – அதிமுகவின் உட்கட்சி மோதல் வரலாறு!