உலகம்
சூடானில் 6 மாதமாகியும் முடியாத மோதல் - ராணுவ படைகளுக்கு இடையே நடைபெற்ற போரில் இரு நாளில் 800 பேர் பலி !
சூடானில் 2021-ம் ஆண்டு ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பிறகு ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. அதன் பின்னர் சூடானை ராணுவ ஆட்சியாளர் அப்துல் பத்தாஹ் அல் புர்ஹான் ஆண்டு வருகிறார், சூடானின் ராணுவம் முழுக்க முழுக்க இவரின் கட்டுப்பாட்டில் இருக்கின்றது.
சூடானில் உள்ள சுரங்கங்களை பாதுகாப்பதற்காக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் துணை ராணுவ படையை (RSF) அன்றைய ஆட்சியாளர்கள் உருவாக்கினார். அதன் தளபதியாக முகமது ஹம்தன் டாக்லோ இருந்து வருகிறார். ராணுவத்துக்கும் துணை ராணுவத்துக்கும் இடையே அடிக்கடி மோதல் போக்கு ஏற்பட்டுவந்துள்ளது.
இதன் காரணமாக விரைவில் துணை ராணுவ படையை கலைத்து அதனை ராணுவத்தில் இணைக்க ராணுவ ஆட்சியாளர் அப்துல் பத்தாஹ் அல் புர்ஹான் திட்டமிட்டிருந்தார். ஆனால் இதனை துணை ராணுவ படையின் தளபதி முகமது ஹம்தன் டாக்லோ கடுமையான எதிர்த்து வந்துள்ளார். இதன் காரணமாக சில மாதங்களுக்கு முன்னர் திடீரென துணை ராணுவ படையினர் நாடு முழுவதும் பரவி ராணுவத்தினர் மேல் தாக்குதலைத் தொடங்கியதால் இரு தரப்புக்கும் இடையே உள்நாட்டுப் போர் தொடங்கியது.
இந்த மோதல் தொடங்கி 6 மாதங்கள் ஆகியுள்ள நிலையில், போரை முடிவுக்கு கொண்டுவர ஐ.நா மேற்கொண்ட நடவடிக்கைகள் எந்த பலனையும் தரவில்லை. இந்த போரில் சுமார் 9 ஆயிரம் நபர்கள் கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், RSF படைகள் சூடானின் முக்கிய பகுதியான டார்பூரை கைப்பற்றியதாகவும்,இரு நாட்கள் நடைபெற்ற இந்த மோதலில் 800 பேர் கொல்லப்பட்டுள்தாகவும் ஐ.நா தெரிவித்துள்ளது. மேலும், டார்பூரை மீட்க சூடானின் ராணுவம் முயன்றுவரும் நிலையில், அங்கு உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கலாம் என்றும் ஐ.நா கவலை தெரிவித்துள்ளது.
Also Read
-
புத்தகக் கண்காட்சிகள் எழுத்தாளர்களுக்கு மட்டுமானது அல்ல அனைவருக்கும் சொந்தம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“இதுதான் அமித்ஷாவின் வேலையா?”: ED ரெய்டுக்கு முதலமைச்சர் மம்தா பானர்ஜி கண்டனம்!
-
1.91 கோடி குடும்பங்களின் கனவை நனவாக்க... “உங்க கனவ சொல்லுங்க” திட்டம்! : நாளை (ஜன.9) முதல் தொடக்கம்!
-
Umagine TN 2026 தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாடு : ரூ.9,820 கோடி முதலீடு - 4250 நபர்களுக்கு வேலைவாய்ப்பு!
-
“இளைய தலைமுறைக்கான தமிழ்நாட்டை கட்டி எழுப்பும் திராவிட மாடல்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!