உலகம்
நிலநடுக்கத்தால் உருகுலைந்த நேபாளம் : கட்டட இடிபாடுகளில் சிக்கி 128 பேர் உயிரிழப்பு!
நேபாளம் தலைநகர் காத்மாண்டில் இருந்து 250 மைல் தூரத்தில் இருக்கும் ஜாஜர்கோட் என்ற பகுதியில் நேற்று 6.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த நாடு முழுவதும் உணரப்பட்டுள்ளது.
மேலும் கட்டங்கள் இடித்து விழுந்துள்ளது. இரவு நேரத்தில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளதால் பலர் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். மேலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மீட்பு பணிகளும் பாதிக்கப்பட்டது. தற்போது தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது.
இதுவரை 128 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. மேலும் கட்டட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. மேலும் நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் முதற்கட்டமாக 5.6 ரிக்டர் அளவில் பதிவானது. பிறகு 11 மைல் ஆழத்தில் 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என அமெரிக்கப் புவியியல் மையம் தெரிவித்துள்ளது.
கடந்த 30 நாட்களில் மட்டும் நேபாளத்தில் மூன்று முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நேற்று ஏற்பட்ட நிலநடுக்கம் இந்தியாவில் டெல்லி, நொய்டா, பாட்னா, பீகார் ஆகிய மாநிலங்களிலும் உணரப்பட்டுள்ளது.
Also Read
-
‘point-blank shot..’ - அசாம் முதல்வர் வெளியிட்ட வீடியோவால் இஸ்லாமியர்கள் அச்சம்! - பின்னணி?
-
“பா.ஜ.க. வந்தால் பற்றி எரியும்… மீண்டும் வந்தால் மீண்டும் எரியும்!” - முரசொலி தலையங்கம் விமர்சனம்!
-
“வடசென்னையை வளர்ந்த சென்னையாக மாற்ற ரூ.8,000 கோடி ஒதுக்கீடு!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரை!
-
சென்னையில் ரூ.13.56 கோடியில் நவீன வசதிகளுடன் ‘முதல்வர் திருமண மாளிகை’ திறப்பு! : முழு விவரம் உள்ளே!
-
“இனி ‘கருணை’ இல்லை! ‘உரிமை’தான்!” : ஜாக்டோ-ஜியோ அமைப்பின் நன்றி மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!