உலகம்
நிலநடுக்கத்தால் உருகுலைந்த நேபாளம் : கட்டட இடிபாடுகளில் சிக்கி 128 பேர் உயிரிழப்பு!
நேபாளம் தலைநகர் காத்மாண்டில் இருந்து 250 மைல் தூரத்தில் இருக்கும் ஜாஜர்கோட் என்ற பகுதியில் நேற்று 6.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த நாடு முழுவதும் உணரப்பட்டுள்ளது.
மேலும் கட்டங்கள் இடித்து விழுந்துள்ளது. இரவு நேரத்தில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளதால் பலர் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். மேலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மீட்பு பணிகளும் பாதிக்கப்பட்டது. தற்போது தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது.
இதுவரை 128 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. மேலும் கட்டட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. மேலும் நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் முதற்கட்டமாக 5.6 ரிக்டர் அளவில் பதிவானது. பிறகு 11 மைல் ஆழத்தில் 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என அமெரிக்கப் புவியியல் மையம் தெரிவித்துள்ளது.
கடந்த 30 நாட்களில் மட்டும் நேபாளத்தில் மூன்று முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நேற்று ஏற்பட்ட நிலநடுக்கம் இந்தியாவில் டெல்லி, நொய்டா, பாட்னா, பீகார் ஆகிய மாநிலங்களிலும் உணரப்பட்டுள்ளது.
Also Read
-
மெட்ரோ விவகாரம் : பதிலே இல்லாமல் பதில் அளித்துள்ள ஒன்றிய அமைச்சர்.. - சு.வெ எம்.பி. விமர்சனம்!
-
“முத்தமிழறிஞர் கலைஞருக்கு ’பாரத ரத்னா’ விருது வழங்க வேண்டும்” - தமிழச்சி தங்கப்பாண்டியன் MP வலியுறுத்தல்!
-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்த மாற்றுக் கட்சியினர்! : முழு விவரம் உள்ளே!
-
சுப்ரியா சாகு IAS-க்கு ‘Champions Of The Earth’ விருது: “தமிழ்நாடு பெருமை கொள்கிறது!” - முதலமைச்சர்!
-
“இவர்களது நியாயங்கள், மாநிலத்துக்கு மாநிலம் மாறுகின்றன!” : முரசொலி தலையங்கம் கண்டனம்!