உலகம்
இருசக்கர வாகனம் வாங்கி தர மறுத்த பெற்றோர்.. வீட்டின் பரம்பரை சொத்தை விற்ற 18 வயது சிறுவன்!
சீனாவை சேர்ந்த 18 வயது சிறுவன் தனது பெற்றோரிடம் இருசக்கர வாகனம் வாங்கி தரும்படி வலியுறுத்தி வந்துள்ளான். ஆனால் சிறுவனின் பெற்றோர் வாங்கி தர மறுத்துள்ளனர்.
இதனால் சிறுவன் பெற்றோர்களுக்குத் தெரியாமல் பரம்பரை சொத்தை விற்க முடிவு செய்துள்ளான். இதற்காக விற்பனை முகவர்களையும் அவர் அணுகியுள்ளார். அப்போது சிறுவனிடம் அவர்கள் ஆசையைத் தூண்டியுள்ளனர்.
பின்னர் அந்த சொத்தை சிறுவனிடம் இருந்து பாதி விலைக்கு விற்பனை முகவர்கள் வாங்கியுள்ளனர். இதை வாங்கிய அந்த முகவர் அதிக லாபத்திற்கு முற்றொரு முகவருக்கு விற்றுள்ளார்.
இதையடுத்து இதுபற்றி சிறுவனின் பெற்றோருக்குத் தெரியவந்துள்ளது. உடனே அவர்கள் முகவர்களைச் சந்தித்து முறையிட்டுள்ளனர். ஆனால் அவர்கள் ஒப்பந்தத்தை ரத்து செய்ய முடியாது என உறுதியாகத் தெரிவித்துள்ளனர்.
பிறகு சிறுவனின் பெற்றோர்கள் நீதிமன்றம் சென்றனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், சிறுவனின் ஆசையைத் தூண்டி குறைந்த விலைக்குச் சொத்து விற்கப்பட்டது தெரியவந்தது.
மேலும் சிறுவனுக்குச் சொத்தை விற்பதற்கான அதிகாரம் இல்லாததால் அந்த ஒப்பந்தத்தை நீதிமன்றம் ரத்து செய்தது. பின்னர் அந்த சொத்தை சிறுவனின் பெற்றோருக்கு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
Also Read
-
“தமிழ்நாட்டின் நிரந்தர டிரெண்ட் Black and Red தான் ; 2.0 ஸ்டார்ட்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
விவசாயிகளின் உரிமைக்கான ”அரிசி” படம் நிச்சயம் வெல்லும் : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
தமிழ்நாட்டு மீனவர்கள் தாயகம் திரும்ப உரிய நடவடிக்கை தேவை : ஒன்றிய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
-
எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள இந்தியா - பாகிஸ்தான் போட்டி: இலங்கை சென்றடைந்த இந்திய அணி! - முழு விவரம்
-
ஒரே தவணையில் ரூ.5 ஆயிரம் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை… முதலமைச்சருக்கு நன்றி தெரிவிக்க திரண்ட பெண்கள்!