உலகம்
உயிருடன் காதலியை புதைத்த முன்னாள் காதலன்.. நீதிமன்ற விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி உண்மை!
இந்தியாவைச் சேர்ந்தவர் ஜாஸ்மீன் கவுர். இவர் நர்சிங் படிப்பதற்காக ஆஸ்திரேலியாவிற்குச் சென்றார். அங்கு அவருக்கு தாரிக்ஜோத் சிங் என்பவரின் அறிமுகம் கிடைத்துள்ளது. இதையடுத்து இருவரும் காதலித்து வந்தனர்.
பின்னர் இவர்களுக்குள் கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் காதலனை ஜாஸ்மீன் கவுர் பிரிந்துள்ளார். காதலி விட்டுச் சென்றதால் ஆத்திரமடைந்த தாரிக்ஜோத் சிங் அவரை பழிவாங்க முடிவு செய்துள்ளார்.
அதன்படி அவரை காரில் கடத்தி சென்று, ஃபிளிண்டர்ஸ் ரேஞ்சஸ் என்ற மலைப்பகுதியில் அடித்து கொடுமைப் படுத்தியுள்ளார். பிறகு அவரை உயிருடன் புதைத்து கொலை செய்துள்ளார்.
இந்த கொடூர கொலை சம்பவம் ஒரு ஆண்டுகளுக்குப் பிறகு நீதிமன்ற விசாரணையின் போதுதான் தாரிக்ஜோத் சிங் நடந்தவற்றை முழுமையாக ஒப்புக்கொண்டுள்ளார். இதையடுத்து நீதிமன்றம் தாரக்ஜோத் சிங்கிற்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.
Also Read
-
“Climate Action, Clean Energy ஆகிய இலக்குகளில் தமிழ்நாடு முதலிடம்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
பீகாரில் மகளிர் திட்டத்தில் முறைகேடு : ஆண்களின் வங்கி கணக்தில் வரவு வைக்கப்பட்ட பணம்!
-
விவசாய நிலங்கள் கையகப்படுத்துவதை தடுக்க நடவடிக்கை என்ன? : நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய திமுக எம்.பி!
-
மாதவிடாய் சுகாதாரத் திட்டம் பயன் தருகிறதா? : ஒன்றிய அரசுக்கு தி.மு.க MP கேள்வி!
-
“GST நஷ்டத்திற்கு இழப்பீடு வேண்டும்” : நாடாளுமன்றத்தில் ராஜேஷ்குமார் MP வலியுறுத்தல்!