உலகம்
உயிருடன் காதலியை புதைத்த முன்னாள் காதலன்.. நீதிமன்ற விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி உண்மை!
இந்தியாவைச் சேர்ந்தவர் ஜாஸ்மீன் கவுர். இவர் நர்சிங் படிப்பதற்காக ஆஸ்திரேலியாவிற்குச் சென்றார். அங்கு அவருக்கு தாரிக்ஜோத் சிங் என்பவரின் அறிமுகம் கிடைத்துள்ளது. இதையடுத்து இருவரும் காதலித்து வந்தனர்.
பின்னர் இவர்களுக்குள் கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் காதலனை ஜாஸ்மீன் கவுர் பிரிந்துள்ளார். காதலி விட்டுச் சென்றதால் ஆத்திரமடைந்த தாரிக்ஜோத் சிங் அவரை பழிவாங்க முடிவு செய்துள்ளார்.
அதன்படி அவரை காரில் கடத்தி சென்று, ஃபிளிண்டர்ஸ் ரேஞ்சஸ் என்ற மலைப்பகுதியில் அடித்து கொடுமைப் படுத்தியுள்ளார். பிறகு அவரை உயிருடன் புதைத்து கொலை செய்துள்ளார்.
இந்த கொடூர கொலை சம்பவம் ஒரு ஆண்டுகளுக்குப் பிறகு நீதிமன்ற விசாரணையின் போதுதான் தாரிக்ஜோத் சிங் நடந்தவற்றை முழுமையாக ஒப்புக்கொண்டுள்ளார். இதையடுத்து நீதிமன்றம் தாரக்ஜோத் சிங்கிற்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.
Also Read
-
”இந்து - முஸ்லிம் பிரிவினை விளையாட்டு விளையாடும் மோடி” : ப.சிதம்பரம் கடும் தாக்கு!
-
“நிவேதாவின் முயற்சிகளுக்கு அரசு உடன் நிற்கும்” : திருநங்கை மாணவியை நேரில் அழைத்து பாராட்டிய அமைச்சர்!
-
இந்துக்களுக்காக கண்ணீர் விடும் பாஜக 10 ஆண்டு காலத்தில் இந்துக்களுக்காகச் செய்தது என்ன? : முரசொலி கேள்வி!
-
மோடியின் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் முழக்கமிட்ட விவசாயிகள்... மோடி கையாண்ட உத்தி என்ன?
-
மிரட்டலா? அல்லது பதவி ஆசையா? : பா.ஜ.க.விற்கு இழுக்கப்பட்ட எதிர்க்கட்சி தலைவர்கள்!