உலகம்
உயிருடன் காதலியை புதைத்த முன்னாள் காதலன்.. நீதிமன்ற விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி உண்மை!
இந்தியாவைச் சேர்ந்தவர் ஜாஸ்மீன் கவுர். இவர் நர்சிங் படிப்பதற்காக ஆஸ்திரேலியாவிற்குச் சென்றார். அங்கு அவருக்கு தாரிக்ஜோத் சிங் என்பவரின் அறிமுகம் கிடைத்துள்ளது. இதையடுத்து இருவரும் காதலித்து வந்தனர்.
பின்னர் இவர்களுக்குள் கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் காதலனை ஜாஸ்மீன் கவுர் பிரிந்துள்ளார். காதலி விட்டுச் சென்றதால் ஆத்திரமடைந்த தாரிக்ஜோத் சிங் அவரை பழிவாங்க முடிவு செய்துள்ளார்.
அதன்படி அவரை காரில் கடத்தி சென்று, ஃபிளிண்டர்ஸ் ரேஞ்சஸ் என்ற மலைப்பகுதியில் அடித்து கொடுமைப் படுத்தியுள்ளார். பிறகு அவரை உயிருடன் புதைத்து கொலை செய்துள்ளார்.
இந்த கொடூர கொலை சம்பவம் ஒரு ஆண்டுகளுக்குப் பிறகு நீதிமன்ற விசாரணையின் போதுதான் தாரிக்ஜோத் சிங் நடந்தவற்றை முழுமையாக ஒப்புக்கொண்டுள்ளார். இதையடுத்து நீதிமன்றம் தாரக்ஜோத் சிங்கிற்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.
Also Read
-
“இத்தகையவர் பாஜக சொல்லுக்குக் கட்டுப்பட்டவராகத் தானே இருப்பார்?” - தேர்தல் ஆணையரை வறுத்தெடுத்த முரசொலி!
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!