உலகம்
அமேசான் காடுகளில் காணாமல் போன சிறுவர்கள்.. 40 நாட்களுக்கு பின்னர் உயிரோடு மீட்பு.. நடந்தது என்ன ?
கடந்த மே மாதம் 1ம் தேதி அன்று ஒரு விமானத்தில் ஒரு தாய், அவரது கணவர் மற்றும் பழங்குடியின சமூகத்தை சேர்ந்த ஒரு முதியவர் மற்றும் நான்கு குழந்தைகள் என மொத்தம் 7 பேர் பிரேசில் நாட்டின் அரராகுவாராவில் இருந்து 300 கி.மீ தொலைவுள்ள கொலம்பியா நாட்டின் சான் ஜோஸ் டெல் குவேரியாருக்குப் சென்றுள்ளனர்.
இவ்ர்கள் சென்ற விமானம் அமேசான் காடுகளுக்கு நடுவில் சென்று கொண்டிருந்தபோது திடீரென விபத்துக்குள்ளானது. இந்த சம்பவம் தொடர்பாக விமான கட்டுப்பாட்டு அறையில் இருந்தவர்கள் மீட்பு படையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.
அதன்படி அவர்கள் விமானம் இறுதியாக விபத்துக்குள்ளான போது இருந்த இடத்தில் தேடியபோது அங்கு விமானத்தில் பயணித்த தாய், தந்தை மற்றும் பழங்குடியின சமூகத்தை சேர்ந்த ஒரு முதியவர் என 3 பேரின் சடலத்தை அங்கு பார்த்துள்ளனர். ஆனால், அதில் பயணித்து 4 சிறுவர்களின் நிலை என்ன என்பது குறித்த தகவல் ஏதும் கிடைக்கவில்லை.
அதனைத் தொடர்ந்து சில நாட்கள் தேடுதலுக்கு பின்னர் அந்த சிறுவர்கள் விபத்தில் இருந்து தப்பிச்சென்றது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து சிறுவர்களை தேடும் படி முடுக்கிவிடப்பட்டது. இதில் உள்ளூர் பழங்குடி மக்களும் களத்தில் இறக்கிவிடப்பட்டனர்.
அதன்படி பல்வேறு தடயங்களை வைத்து அந்த சிறுவர்களை நெருங்கிய மீட்புப்படையினர் இறுதியில் 40 நாட்களுக்கு பின்னர் அந்த 4 சிறுவர்களையும் உயிரோடு கண்டுபிடித்தனர். அதனைத் தொடர்ந்து அந்த சிறுவர்கள் மீட்கப்பட்டு அவ்ர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது. பயங்கரமான அமேசான் காடுகளில் 40 நாட்கள் சிறுவர்கள் உயிரோடு தாக்குப்பிடித்தது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
கையை கட்டிக்கொண்டு இருக்க முடியுமா? : ஆளுநர் வழக்கில் உச்சநீதிமன்றம் சரமாரிக் கேள்வி!
-
”தமிழ்நாட்டில் இரு மடங்கு அதிகரித்த பட்டு உற்பத்தி” : பெருமையுடன் சொன்ன அமைச்சர் தா.மோ.அன்பரசன்!
-
கருப்பு சட்ட மசோதா : “எதிர்க்கட்சிகளை அழிக்க நினைக்கும் மட்ட ரகமான உத்தி இது” - ஜவாஹிருல்லா கண்டனம்!
-
குலசேகரப்பட்டினம் ஏவுதளத்துக்காக ரூ.985.96 கோடி நிதி ஒதுக்கீடு! : கனிமொழி எம்.பி.க்கு ஒன்றிய அரசு பதில்!
-
”அப்பட்டமான கருப்புச் சட்டம்” : அரசியல் சட்டத் திருத்த மசோதாவுக்கு கி.வீரமணி கண்டனம்!