உலகம்
நடுவானில் விமானத்தின் அவசர கதவை திறந்த இளைஞர் அதிரடி கைது.. ஆயுள் தண்டனை கிடைக்க வாய்ப்பு என தகவல் !
அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்து யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ஒன்று பாஸ்டன் நோக்கி சென்றுகொண்டிருந்துள்ளது. அந்த விமானத்தில் டோரஸ் (வயது 33) என்ற பயணி விமானத்தின் அவசரகால கதவு அருகே இருந்த இருக்கையில் அமர்ந்து பயணம் செய்துகொண்டிருந்தார்.
அப்போது திடீரென நடுவானில் டோரஸ் விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயற்சித்துள்ளார். இதனைக் கண்டு சக பயணிகள் அலற, அங்கு வந்த விமான பணிப்பெண் ஒருவர் டோரஸின் செயலை தடுத்ததோடு அவரை தட்டிக்கேட்டுள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த டோரஸ் அந்த பணிப்பெண்ணை தான் வைத்திருந்த இரும்பு கரண்டியால் தாக்கியதோடு அவரின் கழுத்தை பிடித்து நெரித்துள்ளார். உடனே சுதாரித்த சக பயணிகள் அந்த பணிப்பெண்ணை மீட்டனர். மேலும், சிறிது நேரத்தில் டோரஸ் அவரின் இருக்கையில் அமரவைக்கப்பட்டார்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், விமான பைலட்கள் இதுகுறித்து பாஸ்டன் விமான நிலையத்தில் புகார் அளித்தனர். அதனைத் தொடர்ந்து விமானம் பாஸ்டன் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியதும் தயாராக இருந்த விமானநிலைய போலிஸார் டோரசை கைது செய்தனர்.
தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த தவறின் காரணமாக அவருக்கு யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்ய தடை விதிக்கப்படும் என்றும், அவருக்கு அதிகபட்சமாக ஆயுள்தண்டனை வரை கிடைக்க வாய்ப்பிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Also Read
-
“சபரிவர்மனின் மர*த்துக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்!” : எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்!
-
திருமணமான பெண்ணுக்கு 3 மாதங்களாக பாலியல் தொல்லை.. தவெக நிர்வாகிக்கு தர்ம அடி கொடுத்த மக்கள்!
-
கொத்தடிமை ஒப்பந்தம்: ஆத்தூர் நகராட்சியின் அராஜகத்தை வேடிக்கை பார்க்கும் தவெக அரசுக்கு DMK IT WING கண்டனம்
-
த.வெ.க அரசு என்ன டாஷ் பண்ணிட்டு... : பழனி கோயில் நிலம் குறைகேடு விவகாரம் - DMK IT WING கண்டனம்!
-
மலையடிப்பட்டி அகழாய்வுப் பணிகளை தொடர வேண்டும் : முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தல்!