உலகம்
நடுவானில் விமானத்தின் அவசர கதவை திறந்த இளைஞர் அதிரடி கைது.. ஆயுள் தண்டனை கிடைக்க வாய்ப்பு என தகவல் !
அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்து யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ஒன்று பாஸ்டன் நோக்கி சென்றுகொண்டிருந்துள்ளது. அந்த விமானத்தில் டோரஸ் (வயது 33) என்ற பயணி விமானத்தின் அவசரகால கதவு அருகே இருந்த இருக்கையில் அமர்ந்து பயணம் செய்துகொண்டிருந்தார்.
அப்போது திடீரென நடுவானில் டோரஸ் விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயற்சித்துள்ளார். இதனைக் கண்டு சக பயணிகள் அலற, அங்கு வந்த விமான பணிப்பெண் ஒருவர் டோரஸின் செயலை தடுத்ததோடு அவரை தட்டிக்கேட்டுள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த டோரஸ் அந்த பணிப்பெண்ணை தான் வைத்திருந்த இரும்பு கரண்டியால் தாக்கியதோடு அவரின் கழுத்தை பிடித்து நெரித்துள்ளார். உடனே சுதாரித்த சக பயணிகள் அந்த பணிப்பெண்ணை மீட்டனர். மேலும், சிறிது நேரத்தில் டோரஸ் அவரின் இருக்கையில் அமரவைக்கப்பட்டார்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், விமான பைலட்கள் இதுகுறித்து பாஸ்டன் விமான நிலையத்தில் புகார் அளித்தனர். அதனைத் தொடர்ந்து விமானம் பாஸ்டன் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியதும் தயாராக இருந்த விமானநிலைய போலிஸார் டோரசை கைது செய்தனர்.
தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த தவறின் காரணமாக அவருக்கு யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்ய தடை விதிக்கப்படும் என்றும், அவருக்கு அதிகபட்சமாக ஆயுள்தண்டனை வரை கிடைக்க வாய்ப்பிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Also Read
-
பெட்ரோல், டீசல், CNG விலை உயர்வு : தோல்வியை மறைக்க ஒன்றிய அரசு முயற்சி - உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம்.
-
பெட்ரோல், டீசல் விலை உயர்வு - மக்களின் தலையில் அடுத்தடுத்து பாரத்தைப் போடுவதா? - மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
“திசை திருப்பும் உக்தியை செய்கிறது தவெக.. ஆதவ் வார்த்தைகளை கட்டுப்படுத்த வேண்டும்”: சிவசங்கர் எச்சரிக்கை!
-
மாணவர்களின் கல்வி கனவை பறிப்பதா? - நீட் எதிர்ப்பு போராட்டத்தில் திமுகவினர் பங்கேற்பு: RS.பாரதி அறிக்கை!
-
“நீட் மறுதேர்வு நடத்தும் முடிவைக் கைவிடுக” : பிரதமர் மோடிக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம்!