உலகம்
“அமெரிக்காவின் மாகாண ஆளுநராக முதல் இந்திய வம்சாவளி பெண் பதவி ஏற்பு” - யார் இந்த அருணா மில்லர் ?
அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாண ஆளுநராக இந்திய வம்சாவளி பெண் பதவி ஏற்றுக்கொண்ட சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் தெலுங்கானா மாநிலம் ஹைதராப் அருகே பிறந்தவர் அருணா மில்லர். தனது 7 வயதில் குடும்பத்தோடு அமெரிக்காவுக்குச் சென்று அங்கு படிப்பை மேற்கொண்டார்.
பல்வேறு துறைகளில் சாதனையை எட்டிய அருணா மில்லர் தற்போது தனது 58வது வயதில் அமெரிக்காவில் நடைபெற்ற மேரிலேண்ட் பகுதியில் மாகாண துணைநிலை ஆளுநர் பதிவிக்கு ஜனநாயாக கட்சியின் சார்பில் போட்டியிட்டார்.
கடந்த நவம்பரில் நடைபெற்ற தேர்தலில் அருணா மில்லர் வெற்றிப் பெற்றதைத் தொடர்ந்து நேற்றைய தினம் அவர் பதவி ஏற்றுக்கொண்டதாகக் கூறப்படுகிறது. இதன்மூலம் மேரிலேண்ட் மாகாணத்தின் துணை நிலை ஆளுநராக இந்தியர் ஒருவர் தேர்வாகி இருப்பது இதுவே முதல் முறை எனக் கூறப்படுகிறது.
பதவி ஏற்றக் கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அருணா மில்லர், துணை நிலை ஆளுநராக என்னை தேர்வு செய்த மக்களுக்கு நன்றி. மேரிலேண்ட் என்னை பெருமை அடைய செய்துள்ளது. இந்த வெற்றி அனைவருக்குமானது எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அவலம் : ஒரே படுக்கையில் 4 நோயாளிகளுக்குச் சிகிச்சை!
-
‘தான் திருடி, பிறரை நம்பாள்..’ - களவாணித்தனத்தால் ஆட்சி நடத்தும் விஜய்.. பட்டியலிட்டு முரசொலி பதிலடி!
-
மூடப்பட்ட 5 அரசுப்பள்ளிகள்.. சேர்க்கை இல்லை என காரணம் கூறிய அரசு.. கேள்விக்குறியாகும் மாணவர்களின் நிலை!
-
‘டெல்லிக்கு அடிபணியும் தவெக அரசு… முதுகெலும்பற்ற கோழை முதல்வர் விஜய்’ : திமுக IT Wing கடும் விமர்சனம்!
-
CSK-விலிருந்து ஸ்டீபன் பிளெமிங் விலகல்.. பிரிந்த 18 ஆண்டுகால கூட்டணி.. அடுத்த பயிற்சியாளர் யார்?