உலகம்
தேர்தல் முடிவை ஏற்கமுடியாது.. நாடாளுமன்றத்தில் நுழைந்த போராட்டக்காரர்கள்.. போர்க்களமாக பிரேசில் !
பிரேசில் நாட்டில் கடந்த அக்டோபர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் அப்போதைய அதிபரும் தீவிர வலதுசாரியான போல்சனாரோவும், முன்னாள் அதிபரும் இடதுசாரி வேட்பாளருமான லுலா டி சில்வாவும் போட்டியிட்டனர்.
தென்னமெரிக்க கண்டத்தின் மிகப்பெரிய நாடு என்பதால் இந்த தேர்தல் சர்வதேச அளவில் பெரும் கவனம் ஈர்த்தது. இந்த தேர்தலில் வலதுசாரி வேட்பாளர் போல்சனாரோவுக்கு ஆதரவாக சமூக வலைத்தளங்கள் செயல்பட்டதாக புகார் எழுந்தது. மேலும், நாட்டின் வன்முறைக்கு காரணமாக போல்சனாரோ இருந்தார் என்றும் குற்றம் சாட்டப்பட்டது.
இந்த தேர்தல் முடிவுகளில் வலதுசாரியான ஜெயிர் போல்சனாரோவை தோற்கடித்து இடதுசாரி வேட்பாளர் லுலா டி சில்வா வெற்றி பெற்று அதிபராக பொறுப்பேற்றார். ஆனால் இந்த தேர்தல் முடிவுகளை போல்சனாரோவின் ஆதரவாளர்கள் ஏற்காமல் நாட்டின் பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், பிரேசிலியா நகரில் திரண்ட போல்சனாரோவின் ஆதரவாளர்கள், நாடாளுமன்ற கட்டடம், உச்சநீதிமன்றம் மற்றும் அதிபர் மாளிகையினுள் நுழைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், அங்கிருந்த ஜன்னல்கள் மற்றும் பொதுசொத்துக்களையும் சேதப்படுத்தியதால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.
இதனிடையே அதிபர் லுலா டி சில்வாவின் உத்தரவுப்படி கண்ணீர் புகை குண்டுகளை வீசி போல்சனாரோ ஆதரவாளர்களை காவல்துறையினர் விரட்டி அடித்தனர். அதே நேரம் இந்த வன்முறைகளை தான் தூண்டி விடவில்லை என்று போல்சனாரோ கூறியுள்ளார். மேலும், இந்த செயலுக்கு கண்டனம் தெரிவிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த நிகழ்வுகளால் பிரேசிலின் தலைநகரம் போர்க்களம் போல காட்சி அளித்தது.
Also Read
-
குடும்பத்தினர் வருகையால் குதூகலமான BB வீடு : பாரு-கமரு தனி தனியா game ஆடுங்க என்று அறிவுரை கூறிய நண்பன்!
-
ரயிலுக்கு இடையே சிக்கிக் கொண்ட பெண் : உயிர் காத்த RPF வீரர் - குவியும் பாராட்டு!
-
வாக்குறுதி கொடுத்த அடுத்த நாளே 169 செவிலியர்கள் பணிநிரந்தரம் : ஆணைகளை வழங்கிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
-
கிறிஸ்துமஸ் விழாவில் இரட்டை வேடம் போடும் பா.ஜ.க : தி.க தலைவர் கி.வீரமணி ஆவேசம்!
-
கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கான 8 புதிய அறிவிப்புகள்! : முழு விவரம் உள்ளே!