உலகம்
முடிவுக்கு வரப்போகிறதா உக்ரைன்-ரஷ்யா போர்..? - ஆயுதங்களை வீணடிக்கும் உக்ரைன்.. கடுப்பில் நேட்டோ நாடுகள் !
ரஷ்யா - உக்ரைன் இடையேயான 7 மாத போர் தற்போது உக்கிரமான நடந்து வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உக்ரைன் நாட்டின் ஏராளமான இராணுவ இலக்குகளை ரஷ்யப் படைகள் தாக்கி அழித்துள்ளன.
அதேபோல் உக்ரைன் தங்களைத் தற்காத்துக்கொள்ள, ரஷ்யப் படைகளுக்குப் பதிலடி கொடுத்து வருகிறது. எனினும் உக்ரைனின் மேற்கு பகுதியில் பெரும்பாலான பகுதிகள் ரஷ்ய கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளன. போர் தொடங்கியதிலிருந்து அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக ஆயுதங்களை வழங்கி வருகின்றன.
இதுதவிர உக்ரைனுக்கு ஆதரவாக ரஷ்யா மீது பொருளாதாரத் தடையும் விதித்துள்ளனர். இத்தனையும் மீறி ரஷ்யா தொடர்ந்து போரைத் தொடர்ந்து வருகிறது. அதேபோல உக்ரைனும் பின்வாங்காமல் தொடர்ந்து ரஷ்யாவை எதிர்த்துப் போரிட்டு வருகிறது.
இந்த நிலையில், மேற்கத்திய நாடுகளுக்கு உக்ரைன் மீது அதிருப்தி எழுந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் நேட்டோ நாடாக இல்லாத நிலையிலும் அந்நாட்டுக்கு ரஷ்யாவை எதிர்க்கவேண்டும் என்பதற்காக நேட்டோ நாடுகள் ஆயுதங்களை வழங்கி வருகின்றன. ஆனால் இந்த ஆயுதங்களை உக்ரைன் பொறுப்பற்ற விதத்தில் உக்ரைன் வீணடிப்பதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் பேசிய ஐரோப்பிய யூனியனின் தலைவர் ஜோசப் பேரல், "நேட்டோ உறுப்பு நாடுகளில் ராணுவத் தளவாடங்கள் எல்லாம் தீர்ந்துவிட்டன என்று சொல்ல மாட்டேன். ஆனால் வெகுவாகக் குறைந்துவிட்டன. பெருமளவிலான ஆயுதங்களை உக்ரைனுக்கு வாரி வழங்கியதே இதற்குக் காரணம்" என வெளிப்படையாக கூறியுள்ளார்.
கடந்த பிப்ரவரி தொடங்கி இதுவரை அமெரிக்கா மட்டும் உக்ரைனுக்கு 15.2 பில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுதங்களை வழங்கியுள்ளது. இந்த ஆயுதங்களை வைத்து மட்டும் பல மாதங்கள் யுத்தத்தை தொடரமுடியும். ஆனால் இதில் பெரும்பாலான ஆயுதங்களை உக்ரைன் வெறும் 14 நாட்களில் காலி செய்து புதிய ஆயுதங்கள் வேண்டும் என்று கேட்டதாக அமெரிக்க நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
இது போன்ற காரணங்களால் வரும்காலங்களில் அமெரிக்கா உள்ளிட்ட நேட்டோ நாடுகள் உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்குவதை நிறுத்தும் என்றும், இதன் காரணமாக இந்த போர் முடிவுக்கு வரும் என்றும் கூறப்படுகிறது.
Also Read
-
“இலங்கையின் கைப்பிடியில் 61 மீனவர்கள், 248 மீன்பிடிப் படகுகள்!” : ஒன்றிய அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்!
-
கோவையில் ‘சி. சுப்பிரமணியம்’ பெயரில் உயர்மட்ட மேம்பாலம்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
-
நடப்பு கல்வியாண்டில் மாணவர்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகள்.. தமிழ்நாடு அரசு புதிய சாதனை-விவரம்!
-
திருமணம் ஆகாத இளைஞர்களே குறி... 19 வயதில் 8 ஆண்களை ஏமாற்றிய ஆந்திராவின் கல்யாண ரா(வா)ணி!
-
நிலத்தை சமன் செய்யும்போது கிடைத்த 1 இல்ல 2 இல்ல... 86 தங்க நாணயங்கள்... திருப்பத்தூரில் நடந்தது என்ன?