உலகம்
விமானநிலையம் அருகே ஏரியில் பாய்ந்த விமானம்.. 43 பயணிகளின் நிலை என்ன ? தான்சானியாவில் அதிர்ச்சி !
கிழக்கு ஆப்பிரிக்காவில் தான்சானியா நாடு அமைந்துள்ளது. இந்த நாட்டை சேர்ந்த தனியார் விமான நிறுவனமான ப்ரிசிஷன் ஏர் நிறுவனத்தின் விமானம் ஒன்று தான்சானியாவின் வடமேற்கு நகரமான புகோபாவுக்கு 39 பயணிகள், இரண்டு விமானிகள் மற்றும் இரண்டு கேபின் பணியாளர்கள் உட்பட 43 பேரோடு சென்றுள்ளது.
இந்த விமானம் புகோபா நகரத்துக்கு அருகே சென்றபோது அங்கு வானிலை மோசமாகியுள்ளது. இதன் காரணமாக அந்த விமானம் எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கி அங்குள்ள விக்டோரியா ஏரியில் விழுந்துள்ளது.
விமானம் விமான நிலையத்தில் தரையிறங்காத நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக மீட்புப்படையினருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். 43 பேர் அதில் பயணித்த நிலையில், அவர்களில் 26 பேர் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
மீதம் இருக்கும் பயணிகள் நிலை என்ன என்றே தெரியாத நிலையில் அவர்களை தேடும் பணியில் மீட்புப்படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். விமானம் விபத்துக்குள்ளான இடத்தில் இருந்து விமான நிலையம் 100 மீட்டர் தொலைவில்தான் இருந்ததாக போலிஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிரேன்களின் உதவியுடன் விமானத்தைத் தண்ணீரிலிருந்து வெளியே எடுக்கும் முயற்சிகள் நடந்து வருவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இந்த நிலையில் இந்த விமானவிபத்து தொடர்பாக வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்தாண்டில் நடைபெற்ற மிகப்பெரிய விமான விபத்துகளில் ஒன்றாகவும் இந்த விபத்து பதிவாகியுள்ளது.
Also Read
-
“பெண்கள் உயர்ந்து நடைபோட உரிமைத் தொகையும் உயரும்; உரிமையும் உயரும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை : “வெல்லும் தமிழ்ப் பெண்கள்” மாபெரும் வெற்றிக் கொண்டாட்டம்
-
ஒன்றிய அமைச்சர்கள் இல்லாத நாடாளுமன்ற மாநிலங்களவை கூட்டம்! : எதிர்ப்புக்கு பணிந்த ஒன்றிய அரசு!
-
திருப்பரங்குன்றம் - அதிகாரக் குரலில் நீதிமன்றங்களுக்கு உத்தரவிடும் மோகன் பகவத் : மு.வீரபாண்டியன் கண்டனம்!
-
“2026 வெற்றிக்கு அடித்தளமாக ‘இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு’ அமையும்!” : துணை முதலமைச்சர் உதயநிதி அழைப்பு!