உலகம்
Google நிறுவனத்திற்கு ரூ.1,337 கோடி அபராதம் விதித்த இந்திய தொழில் போட்டி ஆணையம்.. காரணம் என்ன?
ஆண்ட்ராய்டு செல்போன்களில் உள்ள கூகுள் ஆப்பை பலர் பயன்படுத்தி தங்களுக்குத் தேவையான தகவல்களை அதில் தேடி பார்த்துக் கொள்கின்றனர். இந்நிலையில் ஆண்ட்ராய்டு செல்போன்களில் முதன்மை பெறும் நோக்கத்தில் கூகுள் நிறுவனம் முறையற்ற வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
இது குறித்து 2019ம் ஆண்டு கூகுள் நிறுவனத்தின் மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த புகார் தொடர்பாக இந்திய தொழில் போட்டி ஆணையம் விசாரணை நடத்தியது.
இதில், ஆண்ட்ராய்டு நிறுவனத்துடன் கூகுள் நிறுவனம் இரண்டு முறைகேடான ஒப்பந்தங்கள் செய்துள்ளது தெரியவந்துள்ளது. மேலும் விற்பனை சந்தையில் முதன்மை பெறுவதற்காகத் தவறான வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்டதும் விசாரணையில் உறுதியாகியுள்ளது.
இதையடுத்து கூகுள் நிறுவனத்திற்கு ரூ.1,337.76 கோடி அபராதம் விதிக்கப்படுவதாக இந்திய தொழில் போட்டி ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும் அந்த முறையற்ற நடவடிக்கையை உடனே நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும் கூகுள் நிறுவனத்திற்கு இந்திய தொழில் போட்டி ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
Also Read
-
“பிரிஜ் பூஷன் குற்றவாளி இல்லை” - பிரிஜ் மகனுக்கு பாஜக சீட் கொடுத்தது தொடர்பாக நிர்மலா சீதாராமன் விளக்கம்!
-
“நீதித்துறையின் மீது மக்களுக்கு நம்பிக்கை குறைந்து வருகிறது” -முன்னாள் நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் வருத்தம்!
-
5வது மாடியில் இருந்து வீசப்பட்ட பேச்சிளம் குழந்தை... தாயை அதிரடியாக கைது செய்த போலீஸ் -விசாரணையில் பகீர்!
-
காணாமல் போன மோடி : காணவில்லை என சுவரொட்டி அடித்த மணிப்பூர் மக்கள்!
-
பிரசாரத்துக்கு சென்ற பாஜக வேட்பாளருக்கு எதிர்ப்பு: சம்பவ இடத்திலேயே விவசாயி பரிதாப பலி -குவியும் கண்டனம்!