உலகம்
Google நிறுவனத்திற்கு ரூ.1,337 கோடி அபராதம் விதித்த இந்திய தொழில் போட்டி ஆணையம்.. காரணம் என்ன?
ஆண்ட்ராய்டு செல்போன்களில் உள்ள கூகுள் ஆப்பை பலர் பயன்படுத்தி தங்களுக்குத் தேவையான தகவல்களை அதில் தேடி பார்த்துக் கொள்கின்றனர். இந்நிலையில் ஆண்ட்ராய்டு செல்போன்களில் முதன்மை பெறும் நோக்கத்தில் கூகுள் நிறுவனம் முறையற்ற வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
இது குறித்து 2019ம் ஆண்டு கூகுள் நிறுவனத்தின் மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த புகார் தொடர்பாக இந்திய தொழில் போட்டி ஆணையம் விசாரணை நடத்தியது.
இதில், ஆண்ட்ராய்டு நிறுவனத்துடன் கூகுள் நிறுவனம் இரண்டு முறைகேடான ஒப்பந்தங்கள் செய்துள்ளது தெரியவந்துள்ளது. மேலும் விற்பனை சந்தையில் முதன்மை பெறுவதற்காகத் தவறான வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்டதும் விசாரணையில் உறுதியாகியுள்ளது.
இதையடுத்து கூகுள் நிறுவனத்திற்கு ரூ.1,337.76 கோடி அபராதம் விதிக்கப்படுவதாக இந்திய தொழில் போட்டி ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும் அந்த முறையற்ற நடவடிக்கையை உடனே நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும் கூகுள் நிறுவனத்திற்கு இந்திய தொழில் போட்டி ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
Also Read
-
சென்னையின் முக்கிய இடங்களில் போக்குவரத்து மாற்றம்... காவல்துறை அறிவிப்பு... முழு விவரம் உள்ளே !
-
சென்னையில் நாளை 12 வார்டுகளில் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் : இடங்கள் விவரங்களை வெளியிட்டது மாநகராட்சி !
-
ஆசியாவிலேயே முதல்முறை... சென்னையில் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு AI கற்றுக்கொடுக்க சிறப்புத் திட்டம் !
-
பிரான்ஸின் வால் டி லாயர் மாகாண சுற்றுலாத்துறையுடன் தமிழ்நாடு சுற்றுலாத்துறை ஒப்பந்தம்! - விவரம் என்ன?
-
தமிழ்நாடு வக்பு வாரியம் சார்பில் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்!