உலகம்
Google நிறுவனத்திற்கு ரூ.1,337 கோடி அபராதம் விதித்த இந்திய தொழில் போட்டி ஆணையம்.. காரணம் என்ன?
ஆண்ட்ராய்டு செல்போன்களில் உள்ள கூகுள் ஆப்பை பலர் பயன்படுத்தி தங்களுக்குத் தேவையான தகவல்களை அதில் தேடி பார்த்துக் கொள்கின்றனர். இந்நிலையில் ஆண்ட்ராய்டு செல்போன்களில் முதன்மை பெறும் நோக்கத்தில் கூகுள் நிறுவனம் முறையற்ற வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
இது குறித்து 2019ம் ஆண்டு கூகுள் நிறுவனத்தின் மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த புகார் தொடர்பாக இந்திய தொழில் போட்டி ஆணையம் விசாரணை நடத்தியது.
இதில், ஆண்ட்ராய்டு நிறுவனத்துடன் கூகுள் நிறுவனம் இரண்டு முறைகேடான ஒப்பந்தங்கள் செய்துள்ளது தெரியவந்துள்ளது. மேலும் விற்பனை சந்தையில் முதன்மை பெறுவதற்காகத் தவறான வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்டதும் விசாரணையில் உறுதியாகியுள்ளது.
இதையடுத்து கூகுள் நிறுவனத்திற்கு ரூ.1,337.76 கோடி அபராதம் விதிக்கப்படுவதாக இந்திய தொழில் போட்டி ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும் அந்த முறையற்ற நடவடிக்கையை உடனே நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும் கூகுள் நிறுவனத்திற்கு இந்திய தொழில் போட்டி ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
Also Read
-
இந்தியாவில் 67% பட்டதாரி இளைஞர்களுக்கு வேலை கிடைப்பதில் சிக்கல் : வெளியான அதிர்ச்சி அறிக்கை!
-
நாடாளுமன்றத்தின் அலுவல் தொடர்பிற்கு ஏன் இந்தி மொழி ஆதிக்கம்? : துரை வைகோ எம்.பி கண்டனம்!
-
ஜவுளி ஏற்றுமதி : குஜராத்தை பின்னுக்குத் தள்ளி தமிழ்நாடு முதலிடம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
-
“தமிழ் மறவர்கள் வீழ்ந்துபோனால்; தாய்த்தமிழ் எங்ஙனம் வாழும் எனச் சிந்தியுங்கள்!” - முதல்வர் மு.க.ஸ்டாலின்!
-
‘கொடநாடு’ என்று சொன்னாலே குலை நடுக்கம் ஏற்படும் பழனிசாமிக்கு! : முரசொலி தலையங்கம் விமர்சனம்!