உலகம்
11 லட்சம் பேர் வாழும் மாவட்டத்தில் 4 பேருக்காக ஊரடங்கு போட்ட சீனா.. என்ன காரணம்?
சீனாவின் வூஹான் நகரில் கடந்த 2019ஆம் ஆண்டு முதல் முறையாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் உலகம் முழுவதும் பரவி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.
இன்னும் இந்த தொற்றிலிருந்து மீள முடியாமல், அதற்கான வழிகளை உலகம் தேடி வருகிறது. தற்போதைக்கு கொரோனாவில் இருந்து மக்களைப் பாதுகாக்கும் விதமாகத் தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு மக்களுக்குச் செலுத்தப்பட்டு வருகிறது.
ஆனால், கொரோனா தொற்று டெல்டா, டெல்டா பிளஸ், ஒமைக்ரான், என அடுத்தடுத்து உருமாறி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இதனால் கொரோனாவுக்கு எதிரான போரில் உலக நாடுகள் தயார் நிலையில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு மக்களைப் பாதுகாத்து வருகின்றன.
இந்நிலையில் சீனாவில் உள்ள ஒரு மாவட்டத்தில் இருக்கும் மக்கள் தொகையில் 4 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று இல்லை என்று கண்டறியப்பட்டுள்ளது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
சீனாவில் 'ஜீரோ கோவிட்' என்ற திட்டத்தின் படி அதிகமாக மக்கள் இருக்கக் கூடிய பகுதிகளில் கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில்தான் ஜியாங்சியா மாவட்டத்தில் கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
இந்த மாவட்டத்தில் மட்டும் 970,000 க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவருக்கும் கடந்த இரண்டு நாட்களாக கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் 4 பேருக்கு மட்டுமே கொரோனா அறிகுறிகள் இல்லை என தெரியவந்துள்ளது.
இதையடுத்து இந்த மாவட்டத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் வீட்டை விட்டு பொதுமக்கள் யாரும் வெளியே வரக்கூடாது என கடும் கட்டுப்பாடுகள் போடப்பட்டுள்ளது. ஒரு மாவட்டத்தில் உள்ள மக்கள் எண்ணிக்கையில் 4 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று இல்லை என்பது உலக நாடுகளை ஆச்சரியப்பட வைத்துள்ளது.
Also Read
-
“எமர்ஜென்சியையே பார்த்த இயக்கம் திமுக; உங்களின் சித்து விளையாட்டிற்கு அஞ்சமாட்டோம்”: முதலமைச்சர் ஆவேசம்!
-
“மதத்தை வைத்து அரசியல் பிழைப்பு நடத்தும் அற்பர்கள்...” : பாஜகவை வெளுத்து வாங்கிய முதலமைச்சர் !
-
சிவகங்கையில் மருது சகோதரர்கள் திருவுருவச் சிலை : திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
தமுக்கம் முதல் நெல்பேட்டை அண்ணா சிலை வரை: நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மேம்பாலம்- திறந்து வைத்த CM MK Stalin
-
ரூ.150 கோடி முதலீடு - எல்காட் மற்றும் ஹெச்சிஎல்டெக் நிறுவனங்களுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்!