உலகம்
சீனாவின் சக்திமான்.. ஐந்தாவது மாடியில் இருந்து விழுந்த குழந்தையை CATCH பிடித்த நபர்.. வைரல் வீடியோ!
சீனாவின் சிஜியாங் மாகாணத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் அருகே 'ஷென் டாங்க்' என்ற நபர் தனது காரை பார்க்கிங் செய்து விட்டு வெளியே வந்துள்ளார். அப்போது அந்த அடுக்குமாடி குடியிருப்பின் ஐந்தாவது மாடியில் இருந்து குழந்தை ஒன்று தவறி விழுந்துள்ளது.
குழந்தை விழும் சத்தம் ஷென் டாங்க்க்கு கேட்ட நிலையில், உடனடியாக சுதாரித்த அவர் அருகே ஒடிச் சென்று மாடியிலிருந்து விழுந்த குழந்தையை கையில் பிடித்துள்ளார். பின்னர் குழந்தையை அருகில் உள்ள மருத்துவமனையிலும் அனுமதித்துள்ளார்.
அங்கு குழந்தைக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் பெரிய பாதிப்பு ஏதும் இல்லை என்பது தெரியவந்தது. இந்த நிலையில், இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
சீனா நாட்டின் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் லிஜியான் சஹாவோ ட்விட்டரில் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில், இந்த நபரை ஹீரோ என பாராட்டியுள்ளார்.
இது குறித்து குழந்தையை காப்பாற்றிய ஷென் டாங்க் கருத்து தெரிவித்துள்ளார். அதில், "ஐந்தாவது மாடியில் இருந்து முதல் தளத்தில் உள்ள கூரையில் பத்திரமாக விழுந்தது. அங்கிருந்து குழந்தை கீழே உருண்டு விழும் என கணித்த நான் அதை கவனித்து கையில் ஏந்தி பிடித்துக்கொண்டேன்" எனக் கூறியுள்ளார்.
Also Read
-
“அமலாக்கத்துறை நடத்தும் அவதூறுப் பிரச்சாரத்தை சட்டப்படி எதிர்கொள்வேன்” : அமைச்சர் கே.என்.நேரு பதிலடி!
-
தேசிய நீர் & நீர் பாதுகாப்பில் பொதுமக்கள் பங்களிப்பு விருதுகள்.. முதல்வரிடம் மாவட்ட ஆட்சியர்கள் வாழ்த்து!
-
23 சட்டமன்ற தொகுதிகளில் சிறு விளையாட்டு அரங்கங்கள்.. கட்டுமானப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர்!
-
ரூ.98.92 கோடி செலவில் மேம்படுத்தப்பட்ட மீன்பிடி துறைமுகங்கள் திறப்பு : 68,300 மீனவர்கள் பயன்!
-
கள்ளக்குறிச்சி : பெற்றோரை இழந்துவாடும் 4 குழந்தைகளையும் அரவணைத்துக் கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!