உலகம்
மூதாட்டி உடையில் வங்கியில் கைவரிசை காட்டிய நபர்.. தூம் 2 பட பாணியில் அமெரிக்காவில் நடந்த கொள்ளை சம்பவம்!
தென்கிழக்கு அட்லாண்டாவிற்குட்பட்ட மெக்டோனாக் நகரில் சேஸ் என்ற வங்கி உள்ளது. இங்கு கடந்த திங்களன்று வயது முதிர்ந்த பெண் ஒருவர் வந்துள்ளார். அவர் வங்கியை முழுமையாகச் சுற்றிப்பார்த்துவிட்டு திடீரென தான் மறைத்து எடுத்து வந்திருந்த துப்பாக்கியைக் காட்டி வங்கி ஊழியர்களை மிரட்டியுள்ளார்.
இதனால் வங்கி ஊழியர்கள் மற்றும் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். பின்னர் வங்கியிலிருந்து பணத்தை எடுத்துக் கொண்டு வெளியே நன்றி கார் ஒன்றில் தப்பிச் சென்றுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த வங்கியிலிருந்த சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்தபோது, பூபோட்டை உடை, வெள்ளை ஷீ, ஆரஞ்சு க்ளவுஸ், தலையில் வெள்ளை நிற விக் அணிந்த நபர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபடும் கட்சி பதிவாகியிருந்தது.
மேலும், மூதாட்டி தோற்றத்தில் மர்ம நபர் ஒருவர் வங்கியில் புகுந்து கொள்ளையடித்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து அந்த சி.சி.டி.வி காட்சியில் மாறுவேடத்தில் இருந்த நபரின் புகைப்படத்தை போலிஸார் சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளனர். மூதாட்டி தோற்றத்துடன் வங்கியில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
”சொந்தக் கட்சிக்காரர்களாலேயே நிராகரிக்கப்பட்ட பழனிசாமி” : முரசொலி!
-
காசா நகரின் 40% பகுதிகளை கைப்பற்றிவிட்டோம், மீதம் இருக்கும் பகுதி விரைவில்... - இஸ்ரேல் அறிவிப்பு !
-
"தமிழ்நாட்டில் பெயர்களுக்கு பின்னால் சாதி இல்லை, பட்டம்தான் உள்ளது" - துணை முதலமைச்சர் உதயநிதி பெருமிதம்!
-
“நம்முடைய அடையாளத்தை ஒருபோதும் மறக்கக் கூடாது” - இங்கிலாந்து வாழ் தமிழர்கள் சந்திப்பில் முதலமைச்சர்!
-
இனி பாதுகாப்பாக பயணம் செய்யலாம்... பொது மக்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு திட்டம் விரைவில் அமல் !