உலகம்
40,000 சம்பளத்துக்கு தவறுதலாக 1.42 கோடி போட்ட நிறுவனம் : பணத்துடன் தலைமறைவான ஊழியர் - அதிகாரிகள் ஷாக்!
சிலியின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றான கன்சோர்சியோ இண்டஸ்ட்ரியல் நிறுவனத்தின் ஊழியர் ஒருவருக்கு கவனக்குறைவாக இந்திய மதிப்பில் ரூ.45 ஆயிரம்-க்கு பதிலாக இந்திய மதிப்பில் ரூ.1.42 கோடி ஊதியமாக அளிக்கப்பட்டுள்ளது.
இந்த தவறு அந்த நிறுவனத்தின் கணக்கை சரி பார்த்தபோது தெரியவந்துள்ளது. உடனடியாக அந்த நிறுவனம் சார்பில் அந்த ஊழியரை தொடர்பு கொண்டு அதிகமாக அளித்த தொகையை திரும்ப கொடுக்குமாறு கூறப்பட்டுள்ளது.
இதனை ஏற்ற அந்த நபரும் தொகையை திரும்ப ஒப்படைப்பதாக கூறியுள்ளார். ஆனால் கூறியபடி பணம் திரும்ப ஒப்படைக்கப்படாததால் அவரை மீண்டும் தொடர்பு கொண்டுள்ளனர். ஆனால் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை.
இதன் பின்னரே அவர் வேலையே ராஜினாமா செய்து தலைமறைவாகியது நிறுவனத்துக்கு தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த நிறுவன ஊழியர்கள் இப்போது பணத்தை திரும்பப்பெற சட்ட அமைப்பை தொடர்பு கொண்டுள்ளனர். இந்த தகவல் சிலியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!