உலகம்
பைக்கில் சென்ற பெண்ணின் தலையில் விழுந்த தேங்காய்.. இணையத்தில் வலம்வரும் அதிர்ச்சி வீடியோ!
மலேசியாவில் உள்ள நெடுஞ்சாலை ஒன்றில் இருசக்கர வாகனத்தில் இரண்டு பேர் சென்றுகொண்டிருந்தனர். அப்போது நெடுஞ்சாலையின் ஓரத்தில் இருந்த தென்னைமரத்தில் இருந்து பெரிய தேங்காய் ஒன்று விழுந்துள்ளது. அந்த தேங்காய் இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்திருந்த பெண்ணின் தலையில் விழுந்துள்ளது.
இதில் படுகாயமடைத்த அந்த பெண் இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்துள்ளார். நல்வாய்ப்பாக அவர் ஹெல்மெட் அணிந்திருந்ததால் அவர் உயிருக்கு ஆபத்து ஏதும் ஏற்படவில்லை. உடனடியாக அங்கிருந்த சிலர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இந்த நிகழ்வுகள் அந்த இருசக்கர வாகனத்தின் பின்னர் வந்த வாகனத்தில் இருந்த கேமராவில் பதிவாகியுள்ளது. பின்னர் சமூக வலைத்தளங்களிலும் இந்த வீடியோ வைரலாகியுள்ளது.
இந்த விடீயோவை தனது பகிர்ந்த மலேசிய அமைச்சர் அஸ்ருல் மகாதீர் பின் அஜிஸும், இதுபோன்ற விபத்துகளை தவிர்க்க நெடுஞ்சாலையோரம் வரிசையாக நிற்கும் தென்னை மரங்களை அகற்றக்கோரி அரசிடம் மனு அளித்துள்ளார்.
மேலும் விபத்தில் படுகாயமடைந்த பெண்ணின் மகள் பேஸ்புக்கில் இந்த வீடியோவைப் பகிர்ந்துள்ளார். அதில், தனது தாய் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதாக கூறியுள்ளார். மேலும் அவர் உடல்நலம் குறித்து அவ்வப்போது தெரிவிப்பேன் எனவும் கூறியுள்ளார்.
Also Read
-
”எங்களுக்கு தமிழ் இலக்கண வகுப்பு எடுக்காதீர்கள்” : பழனிசாமிக்கு பதிலடி தந்த அமைச்சர் எ.வ.வேலு!
-
முதலமைச்சர் கோப்பை : ‘பூப்பந்து விளையாட்டு’ போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ரூ.30 லட்சம் பரிசுத்தொகை!
-
”பாலம் சிறப்பானது ; பெயர் அதனினும் சிறப்பானது” : முரசொலி தலையங்கம் புகழாரம்!
-
"அரசு அலுவலர்கள் சிறப்பாக செயல்பட்டால்தான் அரசின் திட்டங்கள் மக்களை சேரும்" - துணை முதலமைச்சர் உதயநிதி !
-
“ஏன்? எதற்கு? எப்படி?” என்ற தலைப்பில் விழிப்புணர்வுப் போட்டிகள்... யார் யார் விண்ணப்பிக்கலாம்? - விவரம்!