உலகம்
ஆப்கானிஸ்தானில் கடும் நிலநடுக்கம் - 255 பேர் பலி: சுக்குநூறான வீடுகள்!
ஆப்கானிஸ்தானின் தென் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள பக்திகா மாகாணத்தில் உள்ள கோஷ்ஸ் என்னும் நகரத்தில் இருந்து 44 கி.மீ தொலைவில் பூமிக்கு அடியில் 51கி.மீ ஆழத்தில் 6.1 என்ற ரிக்டர் அளவுகோலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுகத்தில் உயிரிழப்புகள் குறித்து முதலில் தகவல் ஏதும் இல்லாத நிலையில் சமீபத்தில் வெளியான தகவலின்படி சுமார் 250 பேர் இந்த சம்பவத்தில் கொல்லப்பட்டதாகவும், பலி எண்ணிக்கை உயரக்கூடும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த நிலநடுக்கத்தில் 150 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அதோடு இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் ஆப்கானிஸ்தானை தாண்டி இந்தியா, பாகிஸ்தான், எல்லைகளுக்குள் சுமார் 500 தூரத்துக்கு உணரப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து கூறியுள்ள தாலிபான் நிர்வாகத்தில் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் தலைவர் முகமது நசிம் ஹக்கானி “ பெரும்பாலான உயிரிழப்புகள் பக்திகா மாகாணத்தில் நடந்துள்ளது. இந்த பக்திகா மாகாணத்தில் 100 பேர் வரை உயிரிழந்திருக்கலாம், 250பேர் காயமடைந்திருக்கலாம். கிழக்கு மாகாணங்களான நான்கார்ஹார், கோஸ்ட் ஆகியபகுதிகளிலும் உயிரிழப்பு நடந்துள்ளது” எனத் தெரிவித்தார்
Also Read
-
வாக்குப்பதிவு சதவீதத்தில் திடீரென அசாதாரணமான 6 % மாறுபாடு ஏற்பட்டது ஏன்? - சீதாராம் யெச்சூரி கேள்வி !
-
பா.ஜ.க.வினரால் அதிகரிக்கும் பாலியல் வன்முறைகள் : கண்டுகொள்ளாத ஒன்றிய பா.ஜ.க அரசு!
-
நிலவின் துருவங்களில் உறைந்திருக்கும் தண்ணீர் : இஸ்ரோவின் ஆய்வில் கிடைத்த உலகை அதிரவைத்த தகவல் !
-
ஜனநாயகத்தன்மையை இழக்கும் இந்தியா : RSF வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!
-
உலகப் பத்திரிகை சுதந்திர நாள் ; ஊடகவியலாளருக்கு திராவிட மாடல் அரசு அளித்த உதவிகள் என்னென்ன ?