உலகம்
ஆண்களை விட பெண்களுக்கு குறைவான ஊதியம்.. அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கும் Google: பின்னணி என்ன?
கூகுள் நிறுவனத்தில் ஊழியர்களுக்கு இடையே பாகுபாடு காட்டப்படுவதாகத் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வந்த நிலையில் இது உண்மை என்று ஒரு சம்பவம் அம்பலப்படுத்தியுள்ளது.
கலிஃபோர்னியாவில் உள்ள கூகுள் நிறுவனத்தில் கடந்த 2013ம் ஆண்டு 15,500 பெண் ஊழியர்களுக்கு ஆண்களை விட குறைவான ஊதியம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஆண்களும், பெண்களும் ஒரே பதவியில் இருந்தபோதும் கூட இந்த ஊதியப் பாகுபாடு இருந்துள்ளது.
இது குறித்து பெண் ஊழியர்கள் சிலர் நிர்வாகத்திடம் முறையிட்டும், உரியப் பதில் கிடைக்கவில்லை. இதனால் வேலையை விட்டுச் சென்ற முன்னாள் ஊழியர்கள் சிலர் 2017ம் ஆண்ட கூகுள் நிறுவனத்தின் மீது வழக்குத் தொடுத்துள்ளனர்.
இந்த வழக்கு விசாரணை ஐந்து வருடங்களுக்கு மேலாக நடைபெற்று வந்துள்ளது. இந்நிலையில், ஊதிய பாகுபாடு காட்டப்பட்ட அனைத்து பெண் ஊழியர்களுக்கும் 118 மில்லியன் டாலர் (இந்திய மதிப்புப்படி ரூ.920 கோடி) இழப்பீட்டை வழங்குவதாகக் கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.
இது குறித்து கூகுள் நிறுவனம் "எங்கள் கொள்கைகள் மற்றும் நடைமுறைகளின் சமத்துவத்தை நாங்கள் உறுதியாக நம்புகிறோம், ஏறக்குறைய ஐந்து வருட வழக்குகளுக்குப் பிறகு, எந்தவொரு ஒப்புதலும் அல்லது கண்டுபிடிப்புகளும் இல்லாமல் இந்த விஷயத்தைத் தீர்ப்பது அனைவருக்கும் நல்லது என்று இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டோம், மேலும் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்" என தெரிவித்துள்ளது.
Also Read
-
வெளியானது ஐபிஎல் 2026 முதற்கட்ட அட்டவணை… El Clasico CSK vs MI போட்டிகள் இல்லையா? - முழு விவரம்!
-
“மீனவர்கள் கைதில் மெத்தனமாக இருப்பது ஏன்?” -நாடாளுமன்றத்தில் தி.மு.க MP-க்களின் அனல் பறந்த கேள்விகள்!
-
ரூ.35.45 கோடி மதிப்பில் முன்னாள் படைவீரர்கள் விடுதி, பயிற்சி மையக் கட்டடம்: அடிக்கல் நாட்டிய முதலமைச்சர்!
-
”அடுத்து வரும் திராவிட மாடல் 2.0 ஆட்சியிலும்... மக்களுக்கான திட்டங்கள்” :துணை முதலமைச்சர் உதயநிதி பேச்சு!
-
சமூக நீதிக்காவலர் வே.ஆனைமுத்து புகைப்படக் கண்காட்சி… நலத்திட்ட உதவிகள் வழங்கினார் துணை முதலமைச்சர்!