உலகம்
“தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெயை விற்கத் தயார்” : ரஷ்யா கொடுத்த கிரீன் சிக்னல் - முடிவெடுக்குமா இந்தியா ?
உக்ரைன் - ரஷ்யாவுடனான போர் தொடர்ந்து 22 நாளாக நடைபெற்று வருகிறது. உக்ரைனுடன் நடந்து வரும் போரால் நாளுக்கு நாள் உலக நாடுகள் பொருளாதார ரீதியாக பல்வேறு பாதிப்புகளை எதிர்க்கொண்டு வருகின்றனர்.
ரஷ்யாவின் போர் நடவடிக்கையால் அமெரிக்கா, கனடா உட்பட பல நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடை வித்து வருகின்றன. சமீபத்தில் கூட அமெரிக்கா, ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் பொருள்களை இறக்குமதி செய்ய தடை விதித்தது. இதனால் கச்சா எண்ணெயை பொருமளவில் இருக்குமதி செய்யும் நாடுகள் என்ன மாதிரியான முடிவெடுப்பது என தெரியாமல் தவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், ரஷ்யாவுடன் நீண்ட காலமாக நட்பு கொண்டிருக்கும் நாடு என்ற அடிப்படையில் இந்தியாவிற்கு தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெயை விற்கத் தயாராக இருப்பதாகக் கூறியுள்ளது. அதேவேளையில் ரஷ்யாவின் ஒப்பந்தம் தொடர்பாக இந்தியா பரிசீலித்து வருவதாகவும் இந்திய பெட்ரோலித் துறை அமைச்சர் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
உலக நாடுகளில் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பால் பெட்ரோல் பொருட்களின் விலை அதிகரித்துள்ள சூழலில் இந்திய மக்களின் நலன் கருதி ரஷ்யாவுடன் இந்த ஒப்பந்தத்தை பிரதமர் மோடி மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளது.
Also Read
-
“கமலாலயத்தில் இருக்கவேண்டியவர் ஆர்.என்.ரவி...” - Left Right வாங்கிய அமைச்சர் ரகுபதி!
-
TET விவகாரம் : “ஆசிரியர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்யவேண்டும்..” - பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
-
திமுக ஆட்சியில் 34 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !
-
கோவையில் TN Rising : முதலமைச்சர் முன்னிலையில் ரூ.43,844 கோடியில் 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!
-
பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகங்கள்... அம்பலப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி.!