உலகம்
மிக உயரமான யானை உயிரிழப்பு... சோகத்தில் பொதுமக்கள்.. ‘நடுங்கமுவ ராஜா’வின் பெருமை தெரியுமா?
இலங்கையின் மிக உயரமான யானையான நடுங்கமுவ ராஜா உயிரிழந்தது. 68 வயதான இந்த யானை கண்டி எசல ஊர்வலத்தில் பல ஆண்டுகளாக புனித பல்லைச் சுமந்தது.
இலங்கையில் பத்தரை அடி உயரம், மிக நீளமான தந்தங்கள் என பிரம்மாண்டமான யானை நடுங்கமுவ ராஜா (68). இலங்கையில் ஆண்டுதோறும் நடைபெறும் புத்த திருவிழாவில் புத்தரின் புனிதப் பல்லைச் சுமந்து வருவது நடுங்கமுவ ராஜாதான். இந்த நிகழ்வின்போது ராஜா யானையை 90 கி.மீ வரை நடக்க வைத்து கூட்டிச் செல்வார்கள். இதனால், இந்த யானையை நாட்டின் அறிவிக்கப்படாத பொக்கிஷமாக அரசும் மக்களும் கருதி வருகின்றனர்.
கடந்த 2015ல் இந்த யானை மீது மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியது. இதனால் யானை காயமடைந்தது. இதனால் சாலை விபத்து போன்ற அசம்பாவிதங்கள் நேரக்கூடாது என்பதற்காக துப்பாக்கி ஏந்திய ராணுவ படை ஒன்று எப்போதும் யானையுடன் இருப்பார்கள்.
நீண்ட நாட்களாக நோய்வாய்ப்பட்டிருந்த நடுங்கமுவ ராஜா கடந்த முறையும் எசல பெரஹெராவின் புனித கலசத்தை சுமந்து சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த யானை உயிரிழந்தது இலங்கையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!