உலகம்
மிக உயரமான யானை உயிரிழப்பு... சோகத்தில் பொதுமக்கள்.. ‘நடுங்கமுவ ராஜா’வின் பெருமை தெரியுமா?
இலங்கையின் மிக உயரமான யானையான நடுங்கமுவ ராஜா உயிரிழந்தது. 68 வயதான இந்த யானை கண்டி எசல ஊர்வலத்தில் பல ஆண்டுகளாக புனித பல்லைச் சுமந்தது.
இலங்கையில் பத்தரை அடி உயரம், மிக நீளமான தந்தங்கள் என பிரம்மாண்டமான யானை நடுங்கமுவ ராஜா (68). இலங்கையில் ஆண்டுதோறும் நடைபெறும் புத்த திருவிழாவில் புத்தரின் புனிதப் பல்லைச் சுமந்து வருவது நடுங்கமுவ ராஜாதான். இந்த நிகழ்வின்போது ராஜா யானையை 90 கி.மீ வரை நடக்க வைத்து கூட்டிச் செல்வார்கள். இதனால், இந்த யானையை நாட்டின் அறிவிக்கப்படாத பொக்கிஷமாக அரசும் மக்களும் கருதி வருகின்றனர்.
கடந்த 2015ல் இந்த யானை மீது மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியது. இதனால் யானை காயமடைந்தது. இதனால் சாலை விபத்து போன்ற அசம்பாவிதங்கள் நேரக்கூடாது என்பதற்காக துப்பாக்கி ஏந்திய ராணுவ படை ஒன்று எப்போதும் யானையுடன் இருப்பார்கள்.
நீண்ட நாட்களாக நோய்வாய்ப்பட்டிருந்த நடுங்கமுவ ராஜா கடந்த முறையும் எசல பெரஹெராவின் புனித கலசத்தை சுமந்து சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த யானை உயிரிழந்தது இலங்கையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
மதத்தை வைத்து பிரச்சாரம் செய்யும் மோடி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை - ஜி.ராமகிருஷ்ணன் !
-
திக்கெட்டும் புகழ் பரப்பும் திராவிட நாயகர் : நாடும் ஏடும் போற்றும் 4 ஆம் ஆண்டு தொடக்கம்!
-
நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர் தற்கொலை : ராஜஸ்தானில் தொடரும் அதிர்ச்சி சம்பவங்கள் !
-
”பா.ஜ.கவுக்கு 150 இடங்கள்கூட கிடைக்காது” : தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி திட்டவட்டம்!
-
”தமிழ்நாடு முழுவதும் தடையில்லா சீரான மும்முனை மின்சாரம்” : தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தகவல்!