உலகம்
நீச்சல் வீரரை கடித்து கடலுக்குள் இழுத்துச் சென்ற சுறா.. சிட்னி கடற்கரையில் நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்!
சிட்னி நகரத்தில் உள்ள கடற்கரை ஒன்றில் கடந்த புதன் கிழமையன்று சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியாக தங்களின் பொழுதுகளை கழித்தும், கடலில் பலர் உற்சாகமாகக் குளித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது சுறா மீன் ஒன்று திடீரென கடலில் குளித்துக் கொண்டிருந்த ஒருவரைக் கடித்து இழுத்துச் சென்றது. இதைப்பார்த்து கடலில் குளித்துக் கொண்டிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தது கடற்கரையை நோக்கி பதறியடித்து ஓடினர்.
இதுபற்றி தகவல் அறிந்த மீட்புக்குழுவினர் அவரை தேடிப்பார்த்தனர். அப்போது துண்டு துண்டாக சில உடல் பாகங்களும், கிழிந்த நிலையில் ஆடைகள் மட்டுமே மீட்புக்குழுவினருக்குக் கிடைத்துள்ளன.
இதையடுத்து கடற்கரையிலிருந்த பொதுமக்களை போலிஸார் அங்கிருந்து வெளியேற்றினர். பின்னர் கடற்கரைக்கு மக்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. கடந்த 60 ஆண்டுகளில் இப்படி ஒரு மோசமான சம்பவம் நடைபெறுவது இதுவே முதல்முறையாகும்.
மேலும் போலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் சுறா இழுத்துச் சென்ற நபர் நீச்சல் வீரர் என்பது தெரியவந்துள்ளது. ஆனால் யார் அவர் என்பதை போலிஸார் கூறவில்லை.
Also Read
-
‘பெரியார் விருது’ பெறும் கனிமொழி எம்.பி! : தி.மு.கழக முப்பெரும் விழா விருதுகள் அறிவிப்பு!
-
காலை உணவுத் திட்டம் : “குழந்தைகளின் வயிறும் நிறைகிறது, அறிவும் வளர்கிறது!” - முதலமைச்சர் நெகிழ்ச்சி!
-
ஆக.26-ல் காலை உணவுத் திட்ட விரிவாக்கம் : சிறப்பு விருந்தினாராக கலந்துகொள்ளும் பஞ்சாப் முதல்வர்!
-
கேழ்வரகு உற்பத்தித் திறனில் இந்தியாவிலேயே முதலிடம்.. விவசாயிகள் போராட வேண்டிய நிலை இல்லாத தமிழ்நாடு!
-
நவம்பரில் கேரளா வரும் மெஸ்ஸியின் அர்ஜென்டினா கால்பந்து அணி : உறுதி செய்த கால்பந்து வாரியம் !