உலகம்
கறுப்பினத்தவர் மீது இனப்பாகுபாடு.. TESLA மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு: பின்னணி என்ன?
மின்சார வாகன புரட்சியின் முன்னணியில் இருப்பது எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவனம். உலகம் முழுவதும் தனது நிறுவனத்தைத் தொடங்க தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறார் மஸ்.
இந்தியாவில் கூட தனது கிளையை தொடங்குவதற்காக ஒன்றிய அரசிடம் அனுமதி கேட்டுள்ளார். இந்நிலையில் இந்நிறுவனம் இனபாகுபாடு சர்ச்சையில் சிக்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்திற்குட்பட்ட பிரான்சிஸ்கோ நகரத்தில் டெஸ்லா தொழிற்சாலை உள்ளது. அங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் இங்கு பணியாற்றி வரும் கறுப்பின தொழிலாளர்களுக்கு வேலைகள் ஒதுக்கீடு, ஊதியம் மற்றும் பதவி உயர்வு ஆகியவற்றில் இனப்பாகுபாடு காட்டப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதையடுத்து வேலை வாய்ப்பு மற்றும் வீட்டு வசதித்துறை டெஸ்லா நிறுவனத்தின் மீது அலமேடா நீதிமன்றத்தில் இனப்பாகுபாடு வழக்குத் தொடுத்துள்ளது. டெஸ்லா நிறுவனத்தின் மீதான இந்த புகார் உலகம் முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இனப்பாகுபாடு புகார் உண்மைக்குப் புறம்பானது என டெஸ்லா நிறுவனம் தனது இணையதளத்தில் விளக்கமளித்துள்ளது.
Also Read
-
அழகுபடுத்தப்படும் சென்னையின் முக்கிய ரயில் பாதைகள் : ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது மெட்ரோ நிர்வாகம் !
-
முடிவடையும் இஸ்ரேல் - காசா போர் : அமைதி ஒப்பந்தத்துக்கு ஹமாஸ் ஒப்புதல் அளித்ததாக டிரம்ப் அறிவிப்பு !
-
இலங்கை கடற்படையால் 30 மீனவர்கள் கைது : நடவடிக்கை கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம் !
-
ரூ.49.59 கோடி - 23 புதிய திட்டப்பணிகள் : 5478 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர்!
-
சுற்றுலா தொகுப்புகள் மூலமாக தமிழ்நாடு அரசுக்கு 2.37 கோடி வருவாய் : அமைச்சர் இரா.இராஜேந்திரன் தகவல்!