உலகம்
கறுப்பினத்தவர் மீது இனப்பாகுபாடு.. TESLA மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு: பின்னணி என்ன?
மின்சார வாகன புரட்சியின் முன்னணியில் இருப்பது எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவனம். உலகம் முழுவதும் தனது நிறுவனத்தைத் தொடங்க தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறார் மஸ்.
இந்தியாவில் கூட தனது கிளையை தொடங்குவதற்காக ஒன்றிய அரசிடம் அனுமதி கேட்டுள்ளார். இந்நிலையில் இந்நிறுவனம் இனபாகுபாடு சர்ச்சையில் சிக்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்திற்குட்பட்ட பிரான்சிஸ்கோ நகரத்தில் டெஸ்லா தொழிற்சாலை உள்ளது. அங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் இங்கு பணியாற்றி வரும் கறுப்பின தொழிலாளர்களுக்கு வேலைகள் ஒதுக்கீடு, ஊதியம் மற்றும் பதவி உயர்வு ஆகியவற்றில் இனப்பாகுபாடு காட்டப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதையடுத்து வேலை வாய்ப்பு மற்றும் வீட்டு வசதித்துறை டெஸ்லா நிறுவனத்தின் மீது அலமேடா நீதிமன்றத்தில் இனப்பாகுபாடு வழக்குத் தொடுத்துள்ளது. டெஸ்லா நிறுவனத்தின் மீதான இந்த புகார் உலகம் முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இனப்பாகுபாடு புகார் உண்மைக்குப் புறம்பானது என டெஸ்லா நிறுவனம் தனது இணையதளத்தில் விளக்கமளித்துள்ளது.
Also Read
-
பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகங்கள்... அம்பலப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி.!
-
“தமிழ்நாடு எனும் அமைதிப் பூங்காவில் எல்லார்க்கும் எல்லாம் கிடைக்கும்! ” : முதல்வர் மு.க.ஸ்டாலின் கட்டுரை!
-
ஒன்றிய அரசின் இந்த மசோதா கார்ப்பரேட்களிடம் கையேந்துகிற நிலையை உருவாக்கும் - செல்வப்பெருந்தகை !
-
கோவையில் ரூ.208.50 கோடி செலவில் ‘செம்மொழிப் பூங்கா’ திறப்பு : முழு விவரம் உள்ளே!
-
”இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையை வாசிக்கவும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!