உலகம்
செத்துப்போன 1 லட்சம் மீன்களை நடுக்கடலில் கொட்டிய கப்பல்.. சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கண்டனம்: பின்னணி என்ன?
பிரான்ஸ் நாட்டின் மேற்கு அட்லாண்டிக்கா பெருங்கடல் பகுதியில் நட்சு நாட்டை சேர்ந்த பிரபல மீன்பிடி கப்பல் கடந்த வியாழனன்று மீன் பிடித்துக் கொண்டிருந்தது. அப்போது இந்தக் கப்பலிலிருந்து செத்துப்போன 1 லட்சம் மீன்கள் கடலில் கொட்டப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேலும் இதற்கான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த செயலுக்கும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
அதேபோல், "இந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டு வருகிறது" என பிரான்ஸ் நாட்டின் மீன்வளத்துறை அமைச்சர் அன்னிக் ஜிரிர்டின் தெரிவித்துள்ளார். மேலும் உரிய ஆதாரங்களை எதிர்நோக்கி உள்ளதாக மீன் வளத்திற்கான ஐரோப்பிய ஆணையர் விர்ஜினிஜஸ் சின்கோவிசியஸ் கூறியுள்ளார்.
இந்த மீன்பிடி கம்பல், மீன் வலையில் ஏற்பட்ட சிதைவு காரணமாக மீன்கள் கடலில் கொட்டியிருக்கலாம் எனவும் சொல்லப்படுகிறது. மேலும் இந்த ஒரு லட்சம் இறந்த மீன்கள் 32,300 சதுர அடிக்குக் கடல் பரப்பில் மிதந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கம்பல் ஏற்கனவே 2012ம் ஆண்டு இதேபோன்று ஒரு சர்ச்சையில் சிக்கியது. அப்போது ஒரு கிலோமீட்டர் நீளத்திற்கு இழுவை வலைகளைப் பயன்படுத்தியதற்காகச் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து அந்த கம்பல் ஆஸ்திரேலியா கடல் பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது மீண்டும் செத்துப்போன மீன்களைக் கடலில் கொண்டு சர்ச்சையில் சிக்கியுள்ளது.
Also Read
-
“வெளியானது வெள்ளை அறிக்கை அல்ல, வெற்று அறிக்கை.. விரைவில் பதில் கூறுகிறேன்” : தங்கம் தென்னரசு!
-
குளத்தில் வாத்து பிடிக்கச் சென்ற அண்ணன், தம்பி : திடீரென நடந்த சோகம்!
-
“விவசாயத்தை அழிக்கும்.. ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு அனுமதியளிக்கக் கூடாது” : CPI(M) வலியுறுத்தல்!
-
“தமிழ்நாட்டை பீகார், உத்தரப்பிரதேசமாக மாற்றிய த.வெ.க அரசு” : தி.மு.க அயலக அணி விமர்சனம்!
-
“ஈவு இரக்கமற்ற காட்டாட்சி...!" - த.வெ.க அரசை கடுமையாகச் சாடிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்!