உலகம்
முன்னாள் காதலனிடம் பணம் பறிக்க ‘பலே’ பிளான் போட்ட காதலி.. லண்டனில் அதிர்ச்சி!
லண்டனைச் சேர்ந்தவர் லியா ஜுமேக்ஸ். இளம்பெண்ணான இவர் ஒருவரைக் காதலித்து வந்துள்ளார். பின்னர் இவர்கள் பிரிந்துள்ளனர். இந்நிலையில் முன்னாள் காதலன் செல்போனுக்கு படம் ஒன்று வந்துள்ளது.
இதில், காதலி ஜுமேக்ஸை மர்ம நபர்கள் கடத்தி துப்பாக்கி முனையில் கட்டிப்போட்டது போன்று இருந்தது. மேலும் ரூ. 2 லட்சம் கொடுத்தால் உங்கள் காதலியை விட்டுவிடுவதாகவும் குறுஞ்செய்தி வந்துள்ளது.
இதுகுறித்து அவர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் பேரில் போலிஸார் வழக்குப் பதிவு செய்து லியா ஜுமேக்ஸ் வீட்டிற்குச் சென்று பார்த்துள்ளனர். அப்போது அவர் காதலனிடம் பணத்தைப் பறிப்பதற்காகக் கடத்தல் நாடகமாடியதாக ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து போலிஸார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அவருக்கு 8 மாதங்கள் சிறைத் தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டனர். பின்னர் போலிஸார் அவரை சிறையில் அடைத்தனர்.
Also Read
-
SIR : “அதிமுக - பாஜக களத்துக்கு வராதபோதுதான் சந்தேகமாக இருக்கிறது...“ - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
235-க்கும் மேற்பட்ட உணவு வகைகள்... 4 நாட்களுக்கு... களைகட்டும் பெசன்ட் நகரில் உணவுத் திருவிழா!
-
இறந்த 4 மாதக் குழந்தையை 20 ரூ. பிளாஸ்டிக் பையில் கொண்டு சென்ற அவலம்.. ஜார்கண்ட் சோகத்தின் பின்னணி என்ன?
-
SIR மூலம் சுமார் 1 கோடி வாக்காளர்கள் நீக்கம்: “தமிழ்நாட்டை குறிவைத்துள்ள பாஜக” - திருமாவளவன் MP கண்டனம்!
-
மனித விலங்கு மோதல்களை கட்டுப்படுத்த நடவடிக்கை.. அதிநவீன கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் திறப்பு!