உலகம்
அமெரிக்காவை மீண்டும் மிரட்டும் கொரோனா.. ஒரே நாளில் 3 லட்சம் பேர் பாதிப்பு.. உலக நாடுகள் அச்சம்!
கொரோனா தொற்றிலிருந்து உலகம் படிப்படியாக மீண்டு வந்த நிலையில் ஒமைக்ரான் தொற்று மீண்டும் உலகத்தை அச்சமடையச் செய்துள்ளது. அதேநேரம் கொரோனா தொற்றும் மீண்டும் வேகமாகப் பரவி வருகிறது.
அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளில் ஒமைக்ரான் தொற்று வேகமாகப் பரவி வருகிறது. அதேநேரம் தினமும் லட்சத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் மட்டும் 50 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் அமெரிக்காவில் ஒரே நாளில் 3 லட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 1,811 பேர் உயிரிழந்துள்ளனர். இது உலக மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் ஏற்கனவே கொரோனா தொற்றால் கொத்துக்கொத்தாக மக்கள் உயிரிழந்த நிலையில் மீண்டும் அங்கு தொற்றின் வேகம் அதிகரித்துள்ள அந்நாட்டு மக்களை அச்சமடையச் செய்துள்ளது.
அமெரிக்காவைப் போலவே, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் ஒமைக்ரான் தொற்றுடன் சேர்ந்து கொரோனா தொற்றும் வேகமாகப் பரவி வருகிறது. மேலும் ஒமைக்ரான் தொற்று உலகம் முழுவதும் அபாய கட்டத்தை எட்டிவிட்டதாக உலக சுகாதார அமைப்பு கவலையுடன் தெரிவித்துள்ளது.
Also Read
-
ச்சீ... பெண்களை இழிவு செய்யும் அதிமுக நிர்வாகிகள்.. வேடிக்கை பார்க்கும் அதிமுக - பாஜக பெண் உறுப்பினர்கள்!
-
கிரிக்கெட்டின் சாம்ராஜ்ஜியம் 7ம் நம்பருக்கு ஓய்வு…தோனியின் சமூக வலைதளப் பதிவு வைரல்? - முழு விவரம் உள்ளே!
-
திமுக கூட்டணியில் விறுவிறுப்பாக நடைபெறும் தொகுதி பங்கீடு.. -6 கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் எத்தனை?
-
வாக்காளர்களே... வாக்களிக்கும்போது அடையாள அட்டை கட்டாயம்.. என்னென்ன ஆவணங்கள் தேவை? - விவரம்!
-
“பாஜகவை வீழ்த்துவதுதான் முதல் குறிக்கோள்!” : திமுக - CPI இடையே முடிந்த தொகுதி உடன்பாடு - விவரம் உள்ளே!