உலகம்
“2 ஆண்டுகளில் 330 கிறிஸ்துமஸ் தாத்தாக்கள் பலி?” : USA நிறுவனம் வெளியிட்ட ‘பகீர்’ தகவல் - பின்னணி என்ன?
இரண்டு வருட கொரோனா ஊரடங்கிற்கு பிறகு உலக நாடுகளில் கடும் கட்டுப்பாடுகளுடம் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. பொதுவாக உற்சாகமுடன் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டும் அமெரிக்காவில் இந்த ஆண்டு கொண்டாட்டம் வித்தியாசமாக அமைந்திருந்தது.
குறிப்பாக குறைவான எண்ணிக்கையிலேயே கிறிஸ்துமஸ் தாத்தாக்கள் தெருக்களில் மக்களை வாழ்த்தினார்கள். சில கிறிஸ்துமஸ் தாத்தாக்கள் இறந்த நிலையில், கொரோனா தொற்று அதிகரிப்பால் மால்கள் மூடப்பட்டதும் மற்றொரு காரணம்.
அமெரிக்காவில் சாண்டாஸ்களுக்கான சர்வதேச சகோதரத்துவ அமைப்பு (ஐ.பி.ஆர்.பி.எஸ்) இந்த ஆண்டில் மட்டும் 55 கிறிஸ்துமஸ் தாத்தாக்கள் உயிரிழந்துள்ளனர் என்று தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த அமைப்பின் நிறுவனர் ஸ்டீபன் அர்னால்டு கூறுகையில், “கிறிஸ்துமஸ் தாத்தாக்கள் பொதுவாக குண்டான மனிதர்கள்.
அவர்களில் பெரும் பாலானோர் உடல் எடை அதிகரிப்பு பிரச்சனையால் அவதிப்படுபவர்கள். மேலும், சர்க்கரை நோய் பாதிப்பும் உள்ளது. அதனுடன் இதய நோய், சிறுநீரக பிரச்சனை போன்ற பல உடல் உபாதைகள் உள்ளன.
இந்த அமைப்பை சார்ந்த சுமார் 1,900 கிறிஸ்துமஸ் தாத்தாக்கள் கொரோனாவால் தீவிர பாதிப்புக்கு உள்ளாகினர். ஆரோக்கிய குறைபாடு அடைந்துள்ளனர். மேலும், கொரோனா காரணமாக தாத்தாக்கள் உயிரிழப்பு அதிகரித்துள்ளது. வயது முதிர்வு காரணமாக சில கிறிஸ்துமஸ் தாத்தாக்கள் உயிரிழந்துள்ளனர்.
‘சாண்டாஸ் கடைசி ரைடின்’ நிறுவனர் கார்லோ கிளெம் கூறுகையில், எனக்கு தெரிந்த வரை இந்த ஆண்டில் மட்டும் 330 கிறிஸ்துமஸ் தாத்தாக்கள் உயிரிழந்துள்ளனர் என்று கூறி அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளார்.
Also Read
-
11 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் : கிராமக் கோயில் பூசாரிகள் மகிழ்ச்சி!
-
ஆன்மீக அன்பர்களும் இறை பற்றாளர்களும் விரும்பும் அரசு திராவிட மாடல் அரசு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
-
தமிழ்நாட்டின் முதல் இரவு வான் பூங்கா : எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது? - 5 சிறப்புகள்!
-
‘நீதித்துறையில் ஊழல்’ என NCERT பாடத்தில் சர்ச்சை… நீதித்துறைக்கு பகிரங்கமான மிரட்டல் - முரசொலி தலையங்கம்!
-
“குஜராத் மோடியா? இந்த லேடியா?” என்று சவால்விட்டவர் மீது மோடிக்கு திடீர் பாசம்! : முதலமைச்சர் விமர்சனம்!