உலகம்
ஒமைக்ரானுக்கு முதல் உயிர்பலி... இங்கிலாந்தில் அச்சம்.. எச்சரிக்கை மணி அடித்த போரிஸ் ஜான்சன்!
பிரிட்டனில் ஒமைக்ரான் வைரஸுக்கு முதல் உயிரிழப்பு பதிவாகியுள்ளதாக அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
ஒமைக்ரான் வைரஸ் பரவலையடுத்து இங்கிலாந்தில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு ஒமைக்ரான் தொற்றுக்கு முதல் பலி ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸில் இருந்து உருமாற்றமடைந்த ஒமைக்ரான் தொற்று இதுவரை 63 நாடுகளில் பரவியுள்ளது. டெல்டா வைரஸை விட ஒமைக்ரான் வைரஸ் வேகமாக பரவுவதாகவும், தடுப்பூசியின் செயல்திறனை குறைக்கும் ஆற்றலை பெற்றுள்ளதாகவும் மருத்துவ வல்லுநர்கள் கூறுகின்றனர்.
பிரிட்டனில் ஒமைக்ரான் தொற்று வேகமாகப் பரவி வருகிறது. இதுகுறித்து அந்நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி வாயிலாக உரையாற்றிய பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், “ஒமைக்ரான் பேரலை வந்து கொண்டிருக்கிறது. ஒமைக்ரான் வேகமாகப் பரவுகிறது.
பிரிட்டனில் இதுவரை மொத்தம் 3,137 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் நாம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இதிலிருந்து பாதுகாப்பாக இருக்க நமக்கு இரண்டு டோஸ் தடுப்பூசிகள் போதுமானதாக இல்லை.” என எச்சரிக்கை விடுத்தார்.
இந்நிலையில் இன்று, ஒமைக்ரான் வைரஸால் பிரிட்டனில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
Also Read
-
மீண்டும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைய ஓய்வறியாமல் உழைப்போம்: செல்வப்பெருந்தகை அழைப்பு!
-
‘நாம் தான் வெல்வோம்’ என்ற எண்ணத்தை எதிரிகளிடமும் ஏற்படுத்தியுள்ளோம்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!
-
சென்னை அண்ணா அறிவாலயத்தில் நாளை (மார்ச் 17) முதல் ‘தி.மு.க வேட்பாளர்கள் நேர்காணல்’! : முழு விவரம் உள்ளே!
-
“கழக அரசு மீது களங்கம் ஏற்படுத்த நினைத்தால் அதனைப் பெண்களே ஏற்க மாட்டார்கள்!” : முரசொலி தலையங்கம்!
-
“இஸ்லாமியர்களின் உரிமைக்காக முதல் ஆளாக குரல் கொடுப்பது தி.மு.க. தான்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!