உலகம்
‘அத செலவு செஞ்சுட்டேன்’ - இங்கிலாந்தில் ஒரு ஏட்டு ஏகாம்பரம் - சுங்கத்துறையினருக்கு ஷாக் கொடுத்த பெண்!
இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தனது வங்கிக் கணக்கைச் சரிபார்த்துள்ளார். அப்போது வங்கிக் கணக்கில் ரூ. 7.7 கோடி வரவு வந்துள்ளதைப் பார்த்து அவர் அதிர்ச்சியடைந்துள்ளார்.
மேலும் இந்த பணம் தவறுதலாக தமது வங்கி கணக்கிற்கு வந்துள்ளது என்பதை அறிந்த அவர் இது குறித்து யாரிடமும் தெரிவிக்காமலிருந்து வந்துள்ளார். பணம் குறித்து யாராவது கேட்பார்கள் என சில மாதங்கள் காத்திருந்துள்ளார்.
ஆனால், யாரும் பணத்தைப் பற்றிக் கேட்காததால் அந்தப் பெண் 20 லட்சத்தைச் செலவு செய்துள்ளார். இதையடுத்து வருவாய் மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் ஒன்றரை வருடம் கழித்து அந்த பெண்ணை தொடர்பு கொண்டுள்ளனர்.
அப்போது, தங்களின் பணம் தான் தவறுதலாக உங்களது வங்கிக் கணக்கிற்கு வந்துள்ளது என்றும் பணத்தைத் திருப்பி கொடுக்கும்படி கேட்டுள்ளனர். இதற்கு அந்தப் பெண் பணத்தைத் திருப்பி கொடுக்க சம்மதித்துள்ளார். ஆனால், ரூ. 20 லட்சத்தைச் செலவு செய்துவிட்டதாகவும், அதை தற்போது செலுத்தும் நிலையில் தான் இல்லை எனவும் கூறியுள்ளனர்.
Also Read
-
ராகுல் காந்தி எழுப்பும் கேள்விகளைக் கண்டு பா.ஜ.க அரசு ஏன் அஞ்சுகிறது? : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி!
-
“விஜய் இன்னும் அசெம்பிள் ஆகாத என்ஜின்” : திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி விமர்சனம்!
-
ஆதிதிராவிடர் பழங்குடியினர் மக்களின் நலன் காப்பதில் முன்னனி மாநிலமாக விளங்கும் தமிழ்நாடு!
-
தமிழ் மொழியுணர்வுக்கான காரணங்களைப் புரிந்துகொள்ள... ‘உயிர் நிகர் தமிழ்‘ நூல்! : முழு விவரம் உள்ளே!
-
ஊழல்வாதிகளை சுத்தம் செய்யும் 'வாஷிங் மெஷின்': பாஜக ஃபார்முலா மகாராஷ்டிர மாநிலத்தில் கிழிந்து தொங்குகிறது!